» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
முன்னாள் அமைச்சர் சி.த. செல்லபாண்டியன் மீது 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு!
ஞாயிறு 17, செப்டம்பர் 2023 6:07:57 PM (IST)
திமுகவினர் புகார் எதிரொலியாக முன்னாள் அமைச்சர் சி.த. செல்லபாண்டியன் மீது 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்தில் நடந்த பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும் தலைமை கழகச் செயலாளருமான சி.த. செல்லபாண்டியன் பேசும்போது, கனிமொழி எம்பி அமைச்சர் கீதாஜீவன் ஆகியோரை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து விளாத்திகுளம் காவல் நிலையத்தில் திமுகவினர் புகார் செய்தனர். புகாரின் பேரில் விளாத்திகுளம் போலீசார் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.த.செல்லபாண்டியன் மீது 153A, 505(1), 294 (B) ஆகிய 3 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் தூத்துக்குடி மாவட்ட அதிமுகவினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மேயருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
வெள்ளி 29, செப்டம்பர் 2023 9:23:02 PM (IST)

சுந்தரம் அருள்ராஜ் மருத்துவமனை சார்பில் இருதய விழிப்புணர்வு நிகழ்ச்சி
வெள்ளி 29, செப்டம்பர் 2023 9:16:24 PM (IST)

பெண் குழந்தைகளைக் காப்போம் பயிலரங்கம் : எஸ்பி துவக்கி வைத்தார்!
வெள்ளி 29, செப்டம்பர் 2023 8:37:35 PM (IST)

தூத்துக்குடியில் செவிலியர் கல்லூரி தொடங்க வேண்டும்: அமைச்சர் கீதாஜீவன் கோரிக்கை
வெள்ளி 29, செப்டம்பர் 2023 8:29:00 PM (IST)

விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் திடீர் ஆய்வு!
வெள்ளி 29, செப்டம்பர் 2023 8:24:58 PM (IST)

அரியநாயகிபுரம் பள்ளியில் புதிய வகுப்பறைகள் அடிக்கல் நாட்டு விழா!
வெள்ளி 29, செப்டம்பர் 2023 8:20:28 PM (IST)
