» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

என்.பெரியசாமி 6வது ஆண்டு நினைவு தினம் : கனிமொழி எம்பி, அமைச்சர்கள் மரியாதை!!

வெள்ளி 26, மே 2023 12:26:39 PM (IST)



தூத்துக்குடியில் திமுக முன்னாள் மாவட்ட செயலாளர் என்.பெரியசாமியின் 6வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. 

தூத்துக்குடி மாவட்ட திமுக செயலாளராக 25 ஆண்டுகளுக்கு மேல் பொறுப்பு வகித்தவர் என்.பெரியசாமி. திமுக தலைவர் கலைஞரின் அன்பிற்கு பாத்திரமாக விளங்கியவர். கலைஞரால் முரட்டு பக்தன் என்று அழைக்கபட்டவர். தூத்துக்குடி நகர தந்தையாக, தூத்துக்குடி தொகுதி எம்.எல்.ஏவாக இருந்து மக்கள் பணியாற்றிவர். அவரது 6வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. 

இதையொட்டி தூத்துக்குடி போல்பேட்டையில் உள்ள அவரது நினைவிடத்தில் திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி, நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு, சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிகழ்வில், சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.சி.சண்முகையா, ஜி.வி.மார்கண்டயன், திருநெல்வேலி மாவட்ட செயலாளர் இரா.ஆவுடையப்பன் உட்பட பலர் கலந்து கொண்டு மலர் அஞ்சலி செலுத்தினர். அதன் பின்னர், அருகில் உள்ள கீதா ஹோட்டல் மைதானத்தில் அன்னதான நிகழ்வு நடைபெற்றது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory