» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி-மும்பைக்கு 2 கோடை சிறப்பு இரயில்கள்: தெற்கு இரயில்வே அறிவிப்பு

வியாழன் 25, மே 2023 6:32:51 PM (IST)

கோடை காலத்தை முன்னிட்டு மும்பை-  தூத்துக்குடிக்கு 2 சிறப்பு இரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.


வருகிற 26ம் தேதி மற்றும் ஜூன் 2ம் தேதி மும்பை சத்ரபதி ரயில் நிலையத்தில் இருந்து (01143) கோடைகால சிறப்பு ரயிலாக தூத்துக்குடிக்கு இயக்கப்படுகிறது.  அதே போன்று தூத்துக்குடி இரயில் நிலையத்தில் இருந்து 28ம் தேதி மற்றும் ஜூன் 4ம் தேதி (01144) ரயில் நிலையத்தில் இருந்து கோடைகால சிறப்பு ரயிலாக இயக்கப்படுகிறது. 

கோடை காலமான தற்போது விவேக் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணச்சீட்டு கிடைக்காமல் அவதிப்படும் பயணிகளுக்கு இந்த கோடை கால  சிறப்பு ரயில் வரப்பிராசதமாக அமைந்துள்ளது என்று பயணிகள் சங்க செயலாளர் பிரம்மநாயகம் ரயில்வேக்கு நன்றி தெரிவித்துள்ளார்.



மக்கள் கருத்து

Balamuruganமே 26, 2023 - 03:36:10 PM | Posted IP 172.7*****

அடேங்கப்பா ஒரு வழியா MP ஆகி தூத்துக்குடிக்கு 4 வருடத்திற்கு பிறகு சம்மர் ரயில்விட ஆவண செய்துள்ளார் அதையாவது நிரந்தரமா விட ஆவணசெய்யவேண்டும் கணிமொழி MP

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads











Thoothukudi Business Directory