» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கல்லால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
சனி 25, மார்ச் 2023 4:30:12 PM (IST)
குளத்தூர் அருகே முன்விரோதம் காரணமாக கல்லால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வேடநத்தம் தெற்கு தெருவை சேர்ந்த கருப்பசாமி மகன் முருகன் (48) என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த தம்மன்னன் மகன் மாரிச்சாமி (எ) ராஜி (44) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 23ம் தேதி முருகன் தனது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த மாரிச்சாமி (எ) ராஜி அவரிடம் தகராறு செய்து அவரை கல்லால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுகுறித்து முருகன் நேற்று அளித்த புகாரின் பேரில் குளத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் வீரபாண்டியன் வழக்குபதிவு செய்து மாரிச்சாமி (எ) ராஜியை கைது செய்தார். கைது செய்யப்பட்ட மாரிச்சாமி (எ) ராஜி மீது ஏற்கனவே மாசார்பட்டி காவல் நிலையத்தில் கொலை வழக்கு உட்பட 2 வழக்குகளும், குளத்தூர் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும் என 3 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பெட்ரோல் குண்டுவீச்சில் காயம் அடைந்த மீனவர் : நிவாரணம் வழங்க கோரிக்கை!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:48:16 PM (IST)

காமராஜரை விமர்சனம் செய்த யூடியூபர் முக்தாரை கைது செய்ய கோரி ஆர்ப்பாட்டம்
திங்கள் 15, டிசம்பர் 2025 12:35:55 PM (IST)

அன்னை தெரேசா தொண்டு நிறுவன ஆண்டு விழா: சிறுவர் இல்லத்தில் புத்தாடைகள் வழங்கல்!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:29:46 PM (IST)

திருநங்கைகள் பெயரை பயன்படுத்தி மெகா ஊழல் : ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கைகள் முற்றுகை!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:13:45 PM (IST)

சாணைக்கல்லில் சிந்து எழுத்துக்கள் கண்டெடுப்பு : பட்டினமருதூரில் தொல்பொருள் அதிசயம்!
திங்கள் 15, டிசம்பர் 2025 11:38:21 AM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் மார்கழி மாதம் பூஜை நேரங்கள் மாற்றம்
திங்கள் 15, டிசம்பர் 2025 11:07:46 AM (IST)










