» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கல்லால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

சனி 25, மார்ச் 2023 4:30:12 PM (IST)

குளத்தூர் அருகே முன்விரோதம் காரணமாக கல்லால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர். 

தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வேடநத்தம் தெற்கு தெருவை சேர்ந்த கருப்பசாமி மகன் முருகன் (48) என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த தம்மன்னன் மகன் மாரிச்சாமி (எ) ராஜி (44) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 23ம் தேதி முருகன் தனது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த மாரிச்சாமி (எ) ராஜி அவரிடம் தகராறு செய்து அவரை கல்லால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இதுகுறித்து முருகன் நேற்று அளித்த புகாரின் பேரில் குளத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் வீரபாண்டியன் வழக்குபதிவு செய்து மாரிச்சாமி (எ) ராஜியை கைது செய்தார். கைது செய்யப்பட்ட மாரிச்சாமி (எ) ராஜி மீது ஏற்கனவே மாசார்பட்டி காவல் நிலையத்தில் கொலை வழக்கு உட்பட 2 வழக்குகளும், குளத்தூர் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும் என 3 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




CSC Computer Education



Arputham Hospital



Thoothukudi Business Directory