» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் பெண் யானை மர்ம சாவு - வனத்துறை அலட்சியம்!!

சனி 25, மார்ச் 2023 4:22:51 PM (IST)



முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் பெண் யானை மர்மமான முறையில் இறந்து கிடந்தது, வன ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நெல்லை மாவட்டம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட பகுதியில் அடிக்கடி மர்மமாக உயிர் இழக்கும் வனவிலங்குகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு மாஞ்சோலை நாலுமுக்கு பகுதியில் சிறுத்தை ஒன்று மர்மமாக இறந்தது. அந்த சுவடு மாறுவதற்கு முன்பு தற்போது யானை ஒன்று மர்மமான முறையில் முண்டந்துறை பகுதியில்  இறந்துள்ளது. 

இறந்த யானை அழுகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வன ஆர்வலர்கள் கூறும்போது முறையான ரோந்து பணியில் இருந்தால் யானை இறந்தது உடனே தெரியவந்திருக்கும். இறந்த யானை அழுகும் வரை அதை பார்க்காமல் வனத்துறை அலட்சியமாக செயல்படுவதாக வன ஆர்வலர்கள் விமர்சித்துள்ளனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Arputham Hospital



Thoothukudi Business Directory