» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கோவில்பட்டியில் வெளுத்து வாங்கிய திடீர் மழை : சாலைகளில் வெள்ளம்!

வெள்ளி 24, மார்ச் 2023 4:33:33 PM (IST)



கோவில்பட்டி நகர் பகுதியில் இன்று பிற்பகலில் வெளுத்து வாங்கிய திடீர் மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. இன்று வழக்கம் போல வெயிலின் தாக்கம் காலையில் இருந்து அதிகமாக இருந்து வந்தது, மதியத்திற்கு மேல் சற்று வெயில் தாக்கம் குறைந்து வானம் மேகமூட்டத்துடன் இருந்தது. திடீரென லேசான சாரலுடன் மழை தொடங்கியது. நேரம் செல்ல,செல்ல சாரல் மழை பலத்த மழையாக பெய்ததது. 

கோவில்பட்டி நகரில் உள்ள பஸ்நிலையம், மெயின்ரோடு, மார்க்கெட் ரோடு, புதுரோடு, கடலையூர் சாலை, எட்டயபுரம் சாலை பகுதிகளில் சுமார் 1 நேரத்திற்கு மேலாக பலத்த மழை பெய்தது. புதுரோடு பகுதியில் பெய்த மழையின் காரணமாக சாலையில் மழை நீர் தேங்கியது. வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துடன் சென்றனர். திடீர் மழையால் கோடை வெப்பம் தணிந்து  மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital

CSC Computer Education





Thoothukudi Business Directory