» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கோவில்பட்டியில் வெளுத்து வாங்கிய திடீர் மழை : சாலைகளில் வெள்ளம்!
வெள்ளி 24, மார்ச் 2023 4:33:33 PM (IST)

கோவில்பட்டி நகர் பகுதியில் இன்று பிற்பகலில் வெளுத்து வாங்கிய திடீர் மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. இன்று வழக்கம் போல வெயிலின் தாக்கம் காலையில் இருந்து அதிகமாக இருந்து வந்தது, மதியத்திற்கு மேல் சற்று வெயில் தாக்கம் குறைந்து வானம் மேகமூட்டத்துடன் இருந்தது. திடீரென லேசான சாரலுடன் மழை தொடங்கியது. நேரம் செல்ல,செல்ல சாரல் மழை பலத்த மழையாக பெய்ததது.
கோவில்பட்டி நகரில் உள்ள பஸ்நிலையம், மெயின்ரோடு, மார்க்கெட் ரோடு, புதுரோடு, கடலையூர் சாலை, எட்டயபுரம் சாலை பகுதிகளில் சுமார் 1 நேரத்திற்கு மேலாக பலத்த மழை பெய்தது. புதுரோடு பகுதியில் பெய்த மழையின் காரணமாக சாலையில் மழை நீர் தேங்கியது. வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துடன் சென்றனர். திடீர் மழையால் கோடை வெப்பம் தணிந்து மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மாநகர் பகுதிகளில் 17ஆம் தேதி குடிநீர் விநியோகம் இருக்காது!
திங்கள் 15, டிசம்பர் 2025 5:40:10 PM (IST)

டிச.19ல் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் : மாவட்ட வருவாய் அலுவலர் தகவல்!
திங்கள் 15, டிசம்பர் 2025 5:24:42 PM (IST)

கார்த்திகை 5வது சோம வாரம்: தூத்துக்குடி சிவன் கோவிலில் 1008 சங்காபிஷேகம்
திங்கள் 15, டிசம்பர் 2025 5:06:23 PM (IST)

தூத்துக்குடியில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு!
திங்கள் 15, டிசம்பர் 2025 4:04:38 PM (IST)

தூத்துக்குடியில் மக்கள் குறை களையும் நாள் கூட்டம் : 387 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது
திங்கள் 15, டிசம்பர் 2025 3:43:10 PM (IST)

இந்திய கிரிக்கெட் அணியில் தூத்துக்குடி வீரர்கள் விளையாட வாய்ப்பு: டிஎன்சிஏ செயலர் பேச்சு
திங்கள் 15, டிசம்பர் 2025 3:32:52 PM (IST)










