» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
போதையில் அரசு பஸ்சை இயக்கிய டிரைவர் மீது வழக்கு
வெள்ளி 24, மார்ச் 2023 2:49:45 PM (IST)
தூத்துக்குடியில் மது போதையில் அரசு பஸ்சை இயக்கிய டிரைவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள கட்டாரி மங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ண ராஜா (39). இவர் தூத்துக்குடி அரசு போக்குவரத்து கழக புறநகர் டிப்போவில் டிரைவராக பணி புரிந்து வருகிறார். இவர் 22-ந்தேதி இரவு தூத்துக்குடியில் இருந்து மதுரைக்கு பஸ்சை ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது அவர் குடிபோதையில் இருந்ததாக தெரிகிறது
இதை அறிந்த பயணிகள் அரசு போக்குவரத்து கழக அதிகாரியிடம் செல்போனில் புகார் அளித்தனர். உடனே அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் ராமகிருஷ்ண ராஜா ஓட்டிச் சென்ற பஸ்சை, புதூர் பாண்டியாபுரம் டோல்கேட் அருகே நிறுத்தி பயணிகளை வேறு பஸ்சில் அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக ராமகிருஷ்ண ராஜா மீது புதியம்புத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் ராமகிருஷ்ண ராஜா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
மக்கள் கருத்து
குடிMar 24, 2023 - 07:52:17 PM | Posted IP 162.1*****
போதை டெஸ்ட் எடுத்தால் என்ன பஸ்ஸில் ஏறும் முன்..
விடியல் படையல் வடையல்Mar 25, 2023 - 02:31:46 PM | Posted IP 162.1*****