» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

போதையில் அரசு பஸ்சை இயக்கிய டிரைவர் மீது வழக்கு

வெள்ளி 24, மார்ச் 2023 2:49:45 PM (IST)


தூத்துக்குடியில் மது போதையில் அரசு பஸ்சை இயக்கிய டிரைவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள கட்டாரி மங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ண ராஜா (39). இவர் தூத்துக்குடி அரசு போக்குவரத்து கழக புறநகர் டிப்போவில் டிரைவராக பணி புரிந்து வருகிறார். இவர் 22-ந்தேதி இரவு தூத்துக்குடியில் இருந்து மதுரைக்கு பஸ்சை ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது அவர் குடிபோதையில் இருந்ததாக தெரிகிறது

இதை அறிந்த பயணிகள் அரசு போக்குவரத்து கழக அதிகாரியிடம் செல்போனில் புகார் அளித்தனர். உடனே அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் ராமகிருஷ்ண ராஜா ஓட்டிச் சென்ற பஸ்சை, புதூர் பாண்டியாபுரம் டோல்கேட் அருகே நிறுத்தி பயணிகளை வேறு பஸ்சில் அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக ராமகிருஷ்ண ராஜா மீது புதியம்புத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் ராமகிருஷ்ண ராஜா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.


மக்கள் கருத்து

விடியல் படையல் வடையல்Mar 25, 2023 - 02:31:46 PM | Posted IP 162.1*****

இவனுகளே டாஸ்மாக் திறந்து வைப்பார்களாம் பிறகு பிடிப்பார்களாம் .

குடிMar 24, 2023 - 07:52:17 PM | Posted IP 162.1*****

போதை டெஸ்ட் எடுத்தால் என்ன பஸ்ஸில் ஏறும் முன்..

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital





Thoothukudi Business Directory