» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் மேயர் ஆய்வு!

செவ்வாய் 21, மார்ச் 2023 3:03:50 PM (IST)



தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் சாலை பணிகள் வடிகால், குடிநீர் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு மேற்கொண்டார்.

தூத்துக்குடி மாநகராட்சி தெற்கு மண்டலம் முத்தையாபுரம் பகுதிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் முனியசாமி கோவில் தெருவில் பணிகள் நிறைவு பெற்ற புதிய தார் சாலைகள், முத்தையாபுரம் தோப்பு தெரு பஸ் நிறுத்துமிடம், ராஜ பாண்டி நகர் மற்றும் பெரியசாமி நகர் பகுதியில் பொதுமக்கள் மட்டுமல்லாது உப்பளத் தொழிலாளர்களும் பயன்பெறும் விதமாக புதியதாக அமைய உள்ள நவீன கழிவறைக்கான இடத்தினையும் மேயர் ஆய்வு செய்தார். ஆய்வின் போது மாமன்ற உறுப்பினர்கள் முத்துவேல், விஜயகுமார், ராஜதுரை, சுயம்பு, பச்சிராஜ், மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital










Thoothukudi Business Directory