» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் மேயர் ஆய்வு!
செவ்வாய் 21, மார்ச் 2023 3:03:50 PM (IST)
தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் சாலை பணிகள் வடிகால், குடிநீர் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு மேற்கொண்டார்.
தூத்துக்குடி மாநகராட்சி தெற்கு மண்டலம் முத்தையாபுரம் பகுதிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் முனியசாமி கோவில் தெருவில் பணிகள் நிறைவு பெற்ற புதிய தார் சாலைகள், முத்தையாபுரம் தோப்பு தெரு பஸ் நிறுத்துமிடம், ராஜ பாண்டி நகர் மற்றும் பெரியசாமி நகர் பகுதியில் பொதுமக்கள் மட்டுமல்லாது உப்பளத் தொழிலாளர்களும் பயன்பெறும் விதமாக புதியதாக அமைய உள்ள நவீன கழிவறைக்கான இடத்தினையும் மேயர் ஆய்வு செய்தார். ஆய்வின் போது மாமன்ற உறுப்பினர்கள் முத்துவேல், விஜயகுமார், ராஜதுரை, சுயம்பு, பச்சிராஜ், மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர்.