» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திருமணமாகாத விரக்தி: வாலிபர் தற்கொலை!
சனி 18, மார்ச் 2023 4:30:31 PM (IST)
ஆறுமுகநேரியில் திருமணமாகாத ஏக்கத்தில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி எஸ்.எஸ்.கோவில் தெரு கிழக்கு பகுதியை சேர்ந்தவர் ராமசாமி. இவருக்கு 2 மகன்கள். மூத்த மகன் சென்னையில் போலீசாக வேலை பார்த்து வருகிறார். 2வது மகன் இசக்கி முருகன் (33), பெற்றோர் இறந்து விட்டதால் வீட்டில் தனியே வசித்து வந்தார். கூலி தொழிலாளியான இவருக்கு திருமணம் ஆகவில்லை.
இவர் தனிமையில் வாடியதால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த நிலையில் புலம்பி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று வெகு நேரம் ஆகியும் வீட்டின் கதவு திறக்கப்படவில்லை. இதனால் அதே பகுதியை சேர்ந்த இவரது பெரியப்பா மகனான முருகன் (44) மற்றும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தப்போது அங்கு இசக்கி முருகன் பிணமாக தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த ஆறுமுகநேரி சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ் நாராயணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இசக்கிமுருகனின் உடலை பிரேத பரிசோதனைக்காக காயல்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பள்ளி ஆசிரியரை தாக்கியதாக மாணவனின் பெற்றோர் உட்பட 4பேர் கைது!
செவ்வாய் 21, மார்ச் 2023 8:28:04 PM (IST)

டி.சி.டபிள்யூ. சார்பில் உலக காடுகள் தினவிழா!
செவ்வாய் 21, மார்ச் 2023 7:45:25 PM (IST)

தமிழக பட்ஜெட் ஏமாற்றம்: அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!
செவ்வாய் 21, மார்ச் 2023 5:38:17 PM (IST)

தூத்துக்குடியில் வீடு புகுந்து 13 பவுன் நகை திருடிய வாலிபர் கைது - நகைகள் மீட்பு
செவ்வாய் 21, மார்ச் 2023 5:31:38 PM (IST)

தேர்வு கட்டண உயர்வு வாபஸ்: மாணவர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!
செவ்வாய் 21, மார்ச் 2023 3:55:07 PM (IST)

தூத்துக்குடி அரசு மருத்துவமனையை மேம்படுத்துவது குறித்து ஆட்சியர் செந்தில்ராஜ் ஆய்வு!
செவ்வாய் 21, மார்ச் 2023 3:28:26 PM (IST)

படிச்சMar 18, 2023 - 05:29:55 PM | Posted IP 162.1*****