» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு வேட்பு மனு: எடப்பாடி கே. பழனிசாமிக்கு வாழ்த்து!

சனி 18, மார்ச் 2023 2:54:47 PM (IST)



அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு வேட்பு மனு செய்த முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமியை வழிமொழிந்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் வாழ்த்து தெரிவித்தார். 

அதிமுகவின் பொதுச் செயலாளர் பதவிக்கு இடைக்கால பொதுச் செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமி இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள  அதிமுக தலைமை கழக அலுவலகத்தில் வைத்து வேட்புமனு தாக்கல் செய்தார். அவரது மனுவை வழிமொழிந்து கையெழுத்திட்ட தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சர்ருமான எஸ்.பி. சண்முகநாதன், பூங்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தார். உதவியாளர்கள் பாலஜெயம், சாம்ராஜ், ஆனந்த் உள்ளிட்டோர் உடனிருந்தனர். 


மக்கள் கருத்து

ராமநாதபூபதிMar 18, 2023 - 04:22:08 PM | Posted IP 162.1*****

மொதல்ல தேர்தல் நடக்குமான்னு பாருங்க ஆபீசர். அப்படி நடந்து அவரு வந்துட்டார்னா நீங்க என்ன ஆவீங்கன்னு பாருங்க ஆபீசர்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory