» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு பணியிடங்கள் : விண்ணப்பங்கள் வரவேற்பு

வெள்ளி 17, மார்ச் 2023 10:25:20 AM (IST)

தூத்துக்குடி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் 3 பிரிவுகளில் வெவ்வேறு காலிப் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் மொத்தம் 30 பணியிடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. ஓட்டுநர், அலுவலக உதவியாளர் என 2 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. அதன்படி அலுவலக உதவியாளர் பணிக்கு 23 பேர், டிரைவர் பணிக்கு 3 பேர், இரவு காவலாளி பணிக்கு 4 பேர் என 30 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இதில் அலுவலக உதவியாளர் பணிக்கு 8 ம்வகுப்பு முடித்திருக்க வேண்டும். டிரைவர் பணிக்கு 8 ம் வகுப்பு முடித்து லைசென்ஸ் வைத்திருப்பதோடு, காவலாளி பணிக்கு தமிழ் எழுத படிக்க தெரிந்திருந்தால் போதும். பணிக்கு விண்ணப்பம் செய்பவர்கள் எஸ்சி, எஸ்டி என்ற 37 வயதுக்குள்ளும், எம்பிசி, டிஎன்சி, பிசி என்றால் 34 வயதுக்குள்ளும் ஜிடி என்றால் 32 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். மேலும் அரசு விதிகள்படி மற்றவர்களுக்கும் வயது தளர்வு உண்டு.

அலுவலக உதவியாளர் மற்றும் காவலாளி பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.15,700 முதல் ரூ.50 ஆயிரம் வரையும், டிரைவருக்கு ரூ.19,500 முதல் ரூ.62,000 வரையும் வழங்கப்படும். பணிக்கு விண்ணப்பம் செய்வோர் ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டு நேர்க்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வாகும் நபர்கள் தூத்துக்குடி, ஆழ்வார்குறிச்சி, திருச்செந்தூர், உடன்குடி, சாத்தான்குளம், கோவில்பட்டி, கயத்தாறு, ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம் உள்ளிட்ட ஊராட்சி ஒன்றியங்களில் பணியமர்த்தப்படுவார்கள். 

எந்த ஊராட்சி ஒன்றியங்களில் பணி வேண்டுமோ அந்த ஊராட்சி ஒன்றியம் சென்று விண்ணப்ப படிவங்களை வாங்கி பூர்த்தி செய்து வழங்க வேண்டும்.  மேலும் விபரங்களுக்கு https://thoothukudi.nic.in/notice_category/recruitment/ என்ற இணைய தள முகவரியில் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் ஏப்ரல் 4ம் தேதிக்குள் தபால் முறையில் அனுப்பி வைக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து

Kalidass.GMar 19, 2023 - 11:08:49 PM | Posted IP 162.1*****

வயது வரம்பு கொஞ்சம் அதிகம் இருந்தால் நல்லா இருந்திருக்கும். இரண்டு மூன்று வருடங்கள் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்பவர் வேலை செய்து வருவோர் கொரோனா காலங்களில் மூன்று வருடங்கள் வீணாகி போனாது போனது அதனால் அவர்களுக்கு வயது வரம்பு இருக்காது என்ன செய்ய வேண்டும் என்று தவித்துக் கொண்டிருக்கின்றனர் எனவே இந்த அரசாங்கம் ஊர்ந்து வயது வரம்புகளை அதிகப்படுத்தினால் நன்றாக இருக்கும் வயது வயது வரம்பு 40 வரை இருப்பாய் நன்றாக இருக்கும்..

Jeyaram.kMar 19, 2023 - 04:04:57 PM | Posted IP 162.1*****

Electrical jop

Ramana IMar 19, 2023 - 12:10:41 PM | Posted IP 162.1*****

District Panchayat leader PA and helper

Ananthakumar KumarMar 19, 2023 - 11:25:41 AM | Posted IP 162.1*****

Electrician job

V.Mathumitha want job for office assistantMar 19, 2023 - 11:08:53 AM | Posted IP 162.1*****

Want job

V.Mathumitha want job for office assistantMar 19, 2023 - 11:08:14 AM | Posted IP 162.1*****

Want job

V.MathumithaMar 19, 2023 - 11:06:50 AM | Posted IP 162.1*****

Wanted job

INBA SURESHMar 19, 2023 - 08:36:44 AM | Posted IP 162.1*****

I request to any one job I want Thank you

LekhaMar 19, 2023 - 08:21:09 AM | Posted IP 162.1*****

Thank u for giving me this opportunity

LekhaMar 19, 2023 - 08:20:44 AM | Posted IP 162.1*****

Thank u for giving me this opportunity

Mari selvamMar 19, 2023 - 08:06:54 AM | Posted IP 162.1*****

Trevar job

விஜயகுமார்.Mar 19, 2023 - 12:35:20 AM | Posted IP 162.1*****

எப்படி பார்த்தாலும் பணம் கொடுப்பவர்களுக்கே வேலை கிடைக்கும்.வெறுமனே கண் துடைப்புக்காக நேர்முகத் தேர்வு என்று ஒன்றை வைத்துவிட்டு ஏற்கனவே பணம் கொடுத்தவர்களுக்கே வேலையை கொடுப்பார்கள்.நேர்முகத்தேர்வுக்கு முன்னரே வேலைக்கான ஆட்களை தேர்வு செய்து வைத்திருப்பார்கள்.

Vignesh vMar 18, 2023 - 08:58:44 PM | Posted IP 162.1*****

I wish to apply for office assistant job

Ameer sikkantherMar 18, 2023 - 03:36:04 PM | Posted IP 162.1*****

Job apply

M.selviMar 18, 2023 - 09:04:48 AM | Posted IP 162.1*****

Office ASSISTANTS Tuticorin work

Karpaga MadhavabMar 17, 2023 - 12:23:47 PM | Posted IP 162.1*****

Want work

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory