» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

முயல் வேட்டையாட முயன்ற 3 பேருக்கு அபராதம் : வனத்துறையினர் நடவடிக்கை

வெள்ளி 3, பிப்ரவரி 2023 11:38:14 AM (IST)

உப்பனாங்குளம் அருகில் முயல் வேட்டையாட முயன்றதாக 3பேருக்கு வனத்துறையினர் அபராதம் விதித்தனர். 

தென்காசி மாவட்டம், களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் கடையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட மத்தளம்பாறை பீட் வெளிமண்டல பகுதியான உப்பனாங்குளம் அருகில் சிலர் முயல் வேட்டையாட முயன்றதாக கடையம் வனச்சரக அலுவலர் கருணாமூர்த்திக்கு கிடைத்த தகவலின் பேரில் வனவர் முருகேசன், வனக்காப்பாளர் ஆறுமுகநயினார் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் நேற்று சம்பவ இடத்துக்கு சென்று சோதனை நடத்தினர். 

அப்போது முயல் வேட்டையாட முயன்றதாக, மத்தளம்பாறை சில்லரைபுரவு கிராமத்தை சேர்ந்த குத்தாலிங்கம் மகன் கைலாசம், அதே பகுதியை சேர்ந்த மாரியப்பன் மகன் முத்துராஜ், குணராமநல்லூரை சேர்ந்த முருகன் மகன் ஆண்ட்ரோஸ் ஆகிய 3 பேரையும் பிடித்தனர்.  இதையடுத்து அம்பை துணை கோட்ட இயக்குனர் செண்பகப்பிரியா உத்தரவின் பேரில், அவர்கள் 3 பேருக்கும் தலா ரூ.25 ஆயிரம் என ரூ.75 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital











Thoothukudi Business Directory