» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பிப்.5ல் மதுக்கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு

வியாழன் 2, பிப்ரவரி 2023 11:53:16 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் வருகிற 5ம் தேதி மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "வடலூர் இராமலிங்கர் நினைவு தினத்தை முன்னிட்டு 05.02.2023 அன்று தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை (கடை / பார்) விதிகள், 2003 விதி 12 துணை விதி (1)- இன் படி அனைத்து அரசு டாஸ்மாக் மதுபான கடைகள் மதுபானக்கடைகளுடன் இணைந்த பார்கள் மற்றும் எப்.எல்2/எப்.எல்.3 உரிமதலங்களும் மூடப்பட்டிருக்க வேண்டும். 

மேற்படி நாளில் மதுபான விற்பனை தடை செய்யப்பட்டுள்ளதால் அன்றைய தினம் மதுபான விற்பனை நடைபெறக் கூடாது. மேற்குறிப்பிட்ட தினத்தில் மதுபான விற்பனை மற்றும் மதுபானத்தை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கடத்துதல் மற்றும் மதுபானத்தை பதுக்கி வைத்தல் போன்ற செயல்கள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது தமிழ்நாடு மதுவிலக்கு தெரிவிக்கப்படுகிறது. அமலாக்கச்சட்டத்தின் கீழ் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital








Thoothukudi Business Directory