» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
போலி நகைகள் கொடுத்து ரூ.7.25லட்சம் மோசடி : 3பேருக்கு போலீஸ் வலைவீச்சு
வியாழன் 2, பிப்ரவரி 2023 10:51:38 AM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் வெவ்வேறு பகுதிகளில் போலி நகைகள் கொடுத்து ரூ.7.25லட்சம் மோசடி செய்த 3பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
நெல்லை மாவட்டம், மூலக்கரைபட்டியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் கண்ணன் (27), இவர் அப்பகுதியில் நகை பட்டறை வைத்துள்ளார். இவரிடம் தூத்துக்குடி மாவட்டம் மணியாச்சி மேலத் தெருவைச் சேர்ந்த மாரிமுத்து மகன் முத்துராமலிங்கம் என்ற போஸ், அகரம் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம், பாலக்காடு கிராமத்தைச் சேர்ந்த பூவுடையார் ஆகிய 3பேரும் வல்லநாட்டில் உள்ள வங்கியில் அடமானம் வைத்த நகையை திருப்ப வேண்டும் என்று கூறி ரூ.4லட்சம் வாங்கினார்களாம்.
பின்னர் வங்கியில் இருந்து நகையை திருப்பியதாக கூறி, அவரிடம் 96 கிராம் எடையுள்ள 12 வளையல்களை கொடுத்துவிட்டு சென்றனர். அந்த நகைகளை கண்ணன் ஆய்வு செய்தபோது அது போலி என்பது தெரியவந்தது. இதுபோல், விருதுநகர் மாவட்டம் திருத்தங்கலைச் சேர்ந்த சுப்பாராயுடு என்பவரிடம் மேற்கண்ட 3பேரும் போலி நகைகளை கொடுத்து ரூ.3.25லட்சம் மோசடி செய்துள்ளனர். இதுகுறித்து புகார்களின் பேரில் முறப்பநாடு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஜமால் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். தலைமறைவாக உள்ள 3பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மாநகரில் நவ.30ம் தேதி மின்தடை!
செவ்வாய் 28, நவம்பர் 2023 10:00:50 PM (IST)

அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த பசுமாடு பலி!
செவ்வாய் 28, நவம்பர் 2023 9:37:13 PM (IST)

தூத்துக்குடியில் கஞ்சா வைத்திருந்த ரவுடி கைது!
செவ்வாய் 28, நவம்பர் 2023 8:50:54 PM (IST)

தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சிறுதானிய, பாரம்பரிய உணவு திருவிழா!
செவ்வாய் 28, நவம்பர் 2023 8:18:25 PM (IST)

அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரங்கள்: அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்!
செவ்வாய் 28, நவம்பர் 2023 8:10:47 PM (IST)

தூத்துக்குடி அன்னம்மாள் கல்லூரியில் சர்வதேச மகளிருக்கு எதிரான வன்கொடுமை தினம்!
செவ்வாய் 28, நவம்பர் 2023 4:34:03 PM (IST)

ஆண்டFeb 2, 2023 - 02:11:35 PM | Posted IP 162.1*****