» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

போலி நகைகள் கொடுத்து ரூ.7.25லட்சம் மோசடி : 3பேருக்கு போலீஸ் வலைவீச்சு

வியாழன் 2, பிப்ரவரி 2023 10:51:38 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் வெவ்வேறு பகுதிகளில் போலி நகைகள் கொடுத்து ரூ.7.25லட்சம் மோசடி செய்த 3பேரை போலீசார் தேடி வருகின்றனர். 

நெல்லை மாவட்டம், மூலக்கரைபட்டியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் கண்ணன் (27), இவர் அப்பகுதியில் நகை பட்டறை வைத்துள்ளார். இவரிடம் தூத்துக்குடி மாவட்டம் மணியாச்சி மேலத் தெருவைச் சேர்ந்த மாரிமுத்து மகன் முத்துராமலிங்கம் என்ற போஸ், அகரம் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம், பாலக்காடு கிராமத்தைச் சேர்ந்த பூவுடையார் ஆகிய 3பேரும் வல்லநாட்டில் உள்ள வங்கியில் அடமானம் வைத்த நகையை திருப்ப வேண்டும் என்று கூறி ரூ.4லட்சம் வாங்கினார்களாம். 

பின்னர் வங்கியில் இருந்து நகையை திருப்பியதாக கூறி, அவரிடம் 96 கிராம் எடையுள்ள 12 வளையல்களை கொடுத்துவிட்டு சென்றனர். அந்த நகைகளை கண்ணன்  ஆய்வு செய்தபோது அது போலி என்பது தெரியவந்தது. இதுபோல், விருதுநகர் மாவட்டம் திருத்தங்கலைச் சேர்ந்த சுப்பாராயுடு என்பவரிடம் மேற்கண்ட 3பேரும் போலி நகைகளை கொடுத்து ரூ.3.25லட்சம் மோசடி செய்துள்ளனர். இதுகுறித்து புகார்களின் பேரில் முறப்பநாடு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஜமால் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். தலைமறைவாக உள்ள 3பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.


மக்கள் கருத்து

ஆண்டFeb 2, 2023 - 02:11:35 PM | Posted IP 162.1*****

பரம்பரைகள்... திருட்டு பரம்பரைகள்...

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital








Thoothukudi Business Directory