» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா 28ல் தொடக்கம் - பிப்.5ல் தேரோட்டம்!
செவ்வாய் 24, ஜனவரி 2023 4:37:41 PM (IST)
உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா வருகிற 28ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் பிப்.5-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.

இந்த ஆண்டு தைப்பூச திருவிழா வருகிற 28-ம் தேதி (சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி அன்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு, மங்கள வாத்தியம் முழங்க சுவாமி சந்திரசேகரர் மனோன்மணி அம்பிகை அலங்கார மண்டபத்திற்கு எழுந்தருள்கிறார்கள்.
தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, காலை 6 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட யானை மீது கொடிபட்ட ஊர்வலம் நடக்கிறது. காலை 7.30 மணிக்கு மேல் கொடியேற்றம் நடைபெறுகிறது. பின்னர் விநாயகர் வீதி உலா, உச்சிகால பூஜை, அன்னதானம், மாலையில் சாயரட்சை சிறப்பு அபிஷேகம், இரவில் சுவாமி சந்திரசேகரர், மனோன்மணி அம்பிகை இந்திர விமான வாகனத்தில் வீதி உலா வருதல் மற்றும் பரதநாட்டியம், சமய சொற்பொழிவு உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது.
தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் விழாவில் தினசரி காலை விநாயகர் வீதி உலா, இரவு சுவாமி சந்திரசேகரர், மனோன்மணி அம்பிகை பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா, சமய சொற்பொழிவு, பரதநாட்டியம், இன்னிசை கச்சேரி உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 9-ம் நாளான வருகிற 5-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 7.30 மணிக்கு மேல் நடைபெறுகிறது. 6-ம் தேதி காலையில் பஞ்சமூர்த்தி வீதி உலாவும், இரவு 10 மணிக்கு தெப்ப திருவிழாவும் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் பரம்பரை தர்மகர்த்தா ப.க.சோ.த.ராதாகிருஷ்ணன் செய்து வருகிறார். அரசு போக்குவரத்து கழகம் சார்பில் நாகர்கோவில், நெல்லை, திசையன்விளையில் இருந்து உவரிக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குளத்தூா் டிஎம்எம் கல்லூரியில் கலை விழா போட்டி : தூத்துக்குடி ஏ.பி.சி., மகளிா் கல்லூரி வெற்றி
சனி 4, பிப்ரவரி 2023 5:35:36 PM (IST)

இரட்டை ரயில் பாதை இணைப்பு பணிகளுக்காக ரயில் போக்குவரத்தில் மாற்றம்
சனி 4, பிப்ரவரி 2023 4:48:10 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்ஸ்பெக்டர்கள் மாற்றம் : தென் மண்டல ஐஜி உத்தரவு
சனி 4, பிப்ரவரி 2023 4:30:51 PM (IST)

பிட்காயின் முதலீடு என்ற பெயரில் ரூ.12லட்சம் மோசடி : வாலிபர் கைது!
சனி 4, பிப்ரவரி 2023 4:09:01 PM (IST)

தூத்துக்குடியில் விஷம் கலந்த அரிசியை தின்ற 3 ஆடுகள் சாவு: போலீசார் விசாரணை
சனி 4, பிப்ரவரி 2023 3:19:27 PM (IST)

நாசரேத்தில் திமுக சார்பில் அண்ணா நினைவு அஞ்சலி
சனி 4, பிப்ரவரி 2023 11:58:08 AM (IST)
