» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சலவை தொழிலாளர்களுக்கு அநீதி ஏற்பட்டால் அதிமுக வேடிக்கை பார்க்காது - எஸ்.பி. சண்முகநாதன் பேச்சு

திங்கள் 23, ஜனவரி 2023 11:06:57 AM (IST)



தூத்துக்குடியில் சலவை தொழிலாளர்களுக்கு அநீதி ஏற்பட்டால் அதிமுக வேடிக்கை பார்க்காது என முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் கூறினார்.

தூத்துக்குடி எம்ஜிஆர் பூங்கா எதிரே அமைந்துள்ள எம்ஜிஆர் திடலில் எம்ஜிஆரின் 106வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் தெற்கு மாவட்ட  செயலாளர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் பேசியதாவது: தூத்துக்குடியில் சலவை தொழிலாளர்களுக்கு கனிமொழி எம்பி, அமைச்சர் கீதா ஜீவன், மேயர் ஜெகன் ஆகியோரால் அநீதி இழைக்கப்பட்டால் அதிமுக வேடிக்கை பார்த்து கொண்டு இருக்காது அதை தகர்த்து தெறிவோம்

தூத்துக்குடியில் சலவைதொழிலாளர்களுக்கு அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டம் இது ஆகவே உரிய முறையில் செயல்படுத்த வேண்டும் கமிஷன் பணத்தை பெற்றுக்கொண்டு சலவை தொழிலாளர்களுக்கு கிடைக்காமல் செய்ய கூடாது. தூத்துக்குடியில் நடைபெறும் ஸ்மார்ட் சிட்டி மற்றும் எல்லா திட்டமும் அதிமுக ஆட்சியில் கொண்டு வர பட்டதே அதற்கு ஸ்டிக்கர் ஒட்டி கொண்டு இருக்கிறீர்கள் இந்த ஆட்சியில் ஸ்டிக்கர் ஒட்டும் வேலைதான் நடக்கிறது.

அதிமுக ஆதரவு தெரிவித்து விட்டார்கள் ஒரே நாடு ஒரே தேர்தல் விரைவில் நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற போகிறது ஸ்டாலின் ஆட்சி கலைகிறது 2024 ல் அதிமுகவை தான் மக்கள் வெற்றி அடைய செய்வார்கள் தலைவர் எடப்பாடியார் முதல்வர் ஆக வருவார் இந்த விடியலுக்கு ஒரு முடிவு கட்ட தமிழக மக்கள் தயாராகி விட்டார்கள். ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக  உறுதியாக வெற்றி பெறும் என்றார். பின்பு பொதுமக்களுக்கு  நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இன்று நடைபெற்ற பொதுகூட்டத்தில் அதிமுகவினர் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர் .


மக்கள் கருத்து

OOPSJan 23, 2023 - 12:06:25 PM | Posted IP 162.1*****

ஆமா! உடனே இந்த சண்முகநாதன் குளத்துல குதித்து துவைக்க ஆரம்பித்துவிடுவார். உங்க ஆட்சி இருக்கும்போது என்ன கோமாவிலா இருந்தீர். கூவத்தூர்ல இருந்து முதல் ஆளா ஓடி வந்தீர். அதற்கு என்ன அமைச்சர் பதவியா குடுத்தாங்க? உம்மை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. இப்போ பெருசா பேசுகிறார்.

ராமநாதபூபதிJan 23, 2023 - 11:29:09 AM | Posted IP 162.1*****

அதிமுக ஆதரவு தெரிவித்து விட்டார்கள் ஒரே நாடு ஒரே தேர்தல் விரைவில் நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற போகிறது. அடேங்கப்பா உங்க கட்சிக்கு நாடாளுமன்றத்தில் எத்தனை எம் பி இருக்காங்க வைத்தியரே. இது கனவிலும் நடக்காத திட்டம்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory