» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அரசு ஊழியர் அடுக்குமாடி குடியிருப்புகள் இடித்து அகற்றம்: நிர்வாக அதிகாரி தகவல்!

சனி 3, டிசம்பர் 2022 12:47:02 PM (IST)

தூத்துக்குடி சங்கரப்பேரியில் உள்ள 198 அரசு ஊழியர் அடுக்குமாடி வாடகை குடியிருப்புகள் இடித்து அகற்றப்பட உள்ளன.

இது தொடர்பாக நெல்லை வீட்டு வசதி வாரிய செயற்பொறியாளர் மற்றும் நிர்வாக அதிகாரி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது : தூத்துக்குடி மாவட்டம் சங்கரப்பேரி உள்ள வீட்டுவசதி வாரியத்தால் கட்டப்பட்ட அரசு ஊழியர் அடுக்குமாடி குடியிருப்புகள் சேதம் அடைந்து, குடியிருக்க தகுதியற்ற நிலையில் உள்ளன. ஆபத்தான நிலையில் உள்ள இந்த வீடுகளை ஒப்பந்தபுள்ளி முறை மற்றும் ஏலம் மூலம் இடித்து அப்புறப்படுத்த தற்போது அரசு அனுமதி அளித்து உள்ளது.

அதன்படி தூத்துக்குடி மாவட்டம் சங்கரப்பேரியில் உள்ள 198 அரசு ஊழியர் அடுக்குமாடி வாடகை குடியிருப்புகள் இடித்து அகற்றப்பட உள்ளன. இந்த பணிக்கு அரசு துறையில் பதிவு பெற்ற ஒப்பந்ததாரர்கள் நெல்லை வீட்டு வசதி வாரிய கோட்ட அலுவலகத்தை 07.12.2022 முதல் 21.12.2022 வரை அலுவலக வேலை நாட்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital








Thoothukudi Business Directory