» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ரயில் மோதி தனியார் நிறுவன வாட்ச்மேன் பலி
வியாழன் 29, செப்டம்பர் 2022 11:36:05 AM (IST)
கோவில்பட்டி அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரயில் மோதி தனியார் நிறுவன வாட்ச்மேன் பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி, முத்து மாரியம்மன் கோவில் முதல் தெருவைச் சேர்ந்தவர் சுப்பையா மகன் மாரியப்பன் (62). இவர், இலுப்பையூரணி அருகில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வாட்ச்மேன் வேலை பார்த்து வந்தார். நேற்று மாலை தன்னுடைய வீட்டில் இருந்து வேலை செய்யும் இடத்திற்கு சென்று கொண்டிருந்தார்.
வேலாயுதபுரம் அருகில் ரயில்வே தண்டவாளத்தை கடக்கும்போது அவ்வழியே வந்த ரயிலில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து தூத்துக்குடி இருப்பு பாதை காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை மீட்டு பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து உதவி ஆய்வாளர் மகாகிருஷ்ணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.