» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ரயில் மோதி தனியார் நிறுவன வாட்ச்மேன் பலி

வியாழன் 29, செப்டம்பர் 2022 11:36:05 AM (IST)

கோவில்பட்டி அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரயில் மோதி தனியார் நிறுவன வாட்ச்மேன் பரிதாபமாக உயிரிழந்தார்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி, முத்து மாரியம்மன் கோவில் முதல் தெருவைச் சேர்ந்தவர்  சுப்பையா மகன் மாரியப்பன் (62). இவர், இலுப்பையூரணி அருகில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வாட்ச்மேன் வேலை பார்த்து வந்தார். நேற்று மாலை தன்னுடைய வீட்டில் இருந்து  வேலை செய்யும் இடத்திற்கு  சென்று கொண்டிருந்தார்.

வேலாயுதபுரம்  அருகில்  ரயில்வே தண்டவாளத்தை கடக்கும்போது அவ்வழியே வந்த ரயிலில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து தூத்துக்குடி இருப்பு பாதை காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை மீட்டு பரிசோதனைக்காக கோவில்பட்டி  அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து உதவி ஆய்வாளர் மகாகிருஷ்ணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory