» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் ஐஎன்டியுசி உறுப்பினர்கள் சேர்க்கை முகாம்
ஞாயிறு 3, ஜூலை 2022 1:07:34 PM (IST)
தூத்துக்குடி பண்டாரம்பட்டியில் முறைசாரா தொழிலாளர்களுக்கு ஐ என்டியுசி சங்கத்தின் மூலம் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது
நிகழ்ச்சியில் முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் மற்றும் ஐஎன்டியூசி அமைப்பு செயலாளர் பெருமாள் சாமி முகாமை தொடங்கி வைத்து உறுப்பினர்களுக்கான விண்ணப்பங்களை வழங்கினார். இந்நிகழ்வில் தி.மு.க தெற்கு பகுதி செயலாளர் சிவக்குமார், ஐஎன்டியுசி தலைவர் ராஜகோபால், துறைமுக தொழிற்சங்க ஐஎன்டிசி தலைவர் சந்திரசேகர், சிக்கன நாணய தலைவர் பால்ராஜ், நிர்வாகிகள் அருளானந்தம், மாரிமுத்து, காங்கிரஸ் நிர்வாகிகள் முத்து விஜயா, காயத்ரி, ஜெயமணி சுரேஷ் செந்தில் முருகன், கார்த்திக், கௌதம் ஆகியோர் கலந்து கொண்டனர்.