» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திருச்செந்தூரில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய கடற்பசு
புதன் 20, அக்டோபர் 2021 8:43:06 AM (IST)

திருச்செந்தூரில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய கடற்பசு மீட்கப்பட்டு பரிசோதனைக்கு பின் புதைக்கப்பட்டது
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் நேற்று மாலையில் சுமார் 4 அடி நீளமும், 25 கிலோ எடை கொண்ட கடல் பசு இறந்த நிலையில் கரை ஒதுங்கியது. தகவல் அறிந்ததும் மாவட்ட வனத்துறை அலுவலர் அபிஷேக் தோமர் உத்தரவின் பேரில் திருச்செந்தூர் வனசரக அலுவலர் ரவீந்திரன் நேரில் சென்று ஆய்வு செய்தார். உயிரிழந்த கடல் பசுவை திருச்செந்தூர் கால்நடை உதவி டாக்டர் பொன்ராஜ் பிரேத பரிசோதனை செய்த பின்னர், கடல்பசு கடற்கரையில் புதைக்கப்பட்டது.
இந்த கடல் பசுக்கள் பெரும்பாலும் ஆழ்கடலில் தெளிந்த நீரோட்டம் உள்ள இடங்களில் வாழ்ந்து வருகின்றன. மாசு கலந்த பகுதிக்கு கடல் பசுக்கள் செல்வது இல்லை. உயிரிழந்த இந்த கடல் பசு வழி தவறி கரையோரம் வந்ததால் பார்வை இழந்து பாறையில் அடிபட்டு உயிரிழந்திருப்பதாக கூறப்படுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் 30 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு புதிய சாதனை
வியாழன் 18, டிசம்பர் 2025 10:30:16 AM (IST)

ரயில் பயணிகளுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் : அமைச்சர் கீதா ஜீவன் தகவல்
வியாழன் 18, டிசம்பர் 2025 10:15:07 AM (IST)

தூத்துக்குடி போக்குவரத்து காவல் ஆய்வாளர் பணியிட மாற்றம்
புதன் 17, டிசம்பர் 2025 8:52:10 PM (IST)

சிறுமிகளை பாலியல் தொந்தரவு செய்தவருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை!
புதன் 17, டிசம்பர் 2025 8:01:14 PM (IST)

தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு
புதன் 17, டிசம்பர் 2025 7:49:57 PM (IST)

முன்னாள் அமைச்சர் சி.த செல்லப்பாண்டியன் விருப்ப மனு
புதன் 17, டிசம்பர் 2025 7:42:57 PM (IST)










