» செய்திகள் - விளையாட்டு » உலகம்

அமெரிக்காவில் 6 ஆயிரம் வெளிநாட்டவர்களை இறந்தவர்களாக அறிவிக்க டிரம்ப் முடிவு!

சனி 12, ஏப்ரல் 2025 3:50:44 PM (IST)

அமெரிக்காவில் புலம்பெயர்ந்து வாழும் 6 ஆயிரத்துக்கு மேற்பட்ட வெளிநாட்டவர்களை இறந்தவர்களாக வகைப்படுத்த டிரம்ப் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. 

அமெரிக்காவில் வசித்து வரும் கியூபா, வெனிசூலா, நிகராகுவா மற்றும் ஹைத்தி மக்களை வெளியேற்றும் வகையில் அவர்களுக்கான சட்ட பாதுகாப்புகளை ரத்து செய்து 30 நாட்களில் அவர்களை வெளியேற்றப்போவதாக கடந்த மாதம் டிரம்ப் அறிவித்தார்.

இந்த காலக்கெடு வருகிற 24-ந்தேதியுடன் முடிவடையும் நிலையில், டிரம்பின் இந்த உத்தரவுக்கு எதிராக பாஸ்டனில் உள்ள கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இந்திரா தல்வானி, டிரம்ப் நிர்வாகத்தின் இந்த உத்தரவை நிறுத்தி வைத்து உத்தரவிட்டார்.

இதற்கிடையே அமெரிக்காவில் புலம்பெயர்ந்து வாழும் 6 ஆயிரத்துக்கு மேற்பட்ட வெளிநாட்டவர்களின் சமூக பாதுகாப்பு எண்களை ரத்து செய்து அவர்களை இறந்தவர்களாக வகைப்படுத்த டிரம்ப் நிர்வாகம் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இதன் மூலம் வேலை, வங்கி பயன்பாடு உள்ளிட்ட அடிப்படை சேவைகளை பெற முடியாமல் அவர்களாகவே வெளியேறும் நிலை உருவாகும் என்பதால் இந்த முடிவை எடுத்திருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





CSC Computer Education


Arputham Hospital



Thoothukudi Business Directory