» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஜி7 மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்பு : உலகத் தலைவர்களுடன் சந்திப்பு!

வெள்ளி 14, ஜூன் 2024 3:59:35 PM (IST)



ஜி7 மாநாட்டில் பங்கேற்க இத்தாலி சென்றுள்ள பிரதமர் மோடி, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஆகியோரை சந்தித்தார்.

ஜி7 நாடுகளின் உச்சி மாநாடு, இத்தாலியின் பஷானோ நகரில் உள்ள அபுலியாவில் நடக்கிறது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் மோடி இத்தாலி சென்றுள்ளார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மாநாட்டின் இடையே, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.

இந்த சந்திப்பு தொடர்பாக வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் வெளியிட்ட பதிவில் கூறியதாவது: இரு தலைவர்களும் பாதுகாப்பு, அணுசக்தி, விண்வெளி,கல்வி, பருவநிலை மாற்றம், டிஜிட்டல் உள்கட்டமைப்பு, தொழில்நுட்பம் ஆகியவை குறித்து ஆலோசனை நடத்தினர். உள்நாட்டு மற்றும் சர்வதேச பிரச்னைகள் தொடர்பாக இரு தலைவர்களும் கருத்துகளை பரிமாறிக் கொண்டனர். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

இதன் பிறகு பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கையும், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியையும் பிரதமர் மோடி சந்தித்தார். இத்தாலி அதிபர் உள்ளிட்ட பல உலக தலைவர்களை பிரதமர் மோடி சந்திக்க உள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital


New Shape Tailors



Thoothukudi Business Directory