» செய்திகள் - விளையாட்டு » உலகம்

பாகிஸ்தானில் கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து : உயிரிழப்பு 18ஆக அதிகரிப்பு!

வியாழன் 6, ஜூன் 2024 12:10:50 PM (IST)

பாகிஸ்தானில் கடந்த சில நாட்களுக்கு முன் கேஸ் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழப்பு 18 ஆக உயர்ந்துள்ளது.

பாகிஸ்தானின் பரீதாபாத் நகரில் கேஸ் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் ஜீஷன் என்பவரின் மகள் அலிஷா (17), அர்ஷத் என்பவரின் மகன் உமைர் (15), முபாரக் என்பவரின் மகன் அப்பாஸ் அலி (14) மற்றும் மெஹர் பாக்ரி என்பவரின் மகன் தோடா (25) ஆகிய 4 பேர் சமீபத்தில் உயிரிழந்தனர். இதனால், பலி எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது.

ஜீஷனின் மகன் முகமது ஹசன் என்ற அலி ஹைதர் இந்த வெடிவிபத்தில் சமீபத்தில் உயிரிழந்த நிலையில், மகளும் உயிரிழந்து விட்டார். 5 வயது மகள் கின்ஜா சிகிச்சை பெற்று வருகிறார். முறையான அனுமதி இன்றி கேஸ் சிலிண்டர் விற்பனை கடைகள் செயல்பட்டு வருகின்றன என அரசு நிர்வாகம் கூறி வருகிறது.

சட்டவிரோத, கியாஸ் மற்றும் சி.என்.ஜி. நிரப்பு நிலையங்களுக்கு எதிராக, கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி துறை நிறுவன உயரதிகாரிகளுக்கு காவல் துணை ஆணையாளர் ஜெய்ன் உல் அபிதின் மேமன் வேண்டுகோள் விடுத்துள்ளார். சட்டவிரோத விற்பனைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்துறை செயலாளருக்கும் அவர் கடிதம் எழுதி உள்ளார்.

இதேபோன்று, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு போதிய உபகரணங்கள், முறையான ஐ.சி.யு. வார்டுகள் உள்ளிட்டவை இல்லை என்றும் குற்றச்சாட்டு கூறப்படுகிறது. 20 ஆண்டுகளாக தீக்காயத்திற்கு சிகிச்சை அளிக்க போதிய கட்டிட வசதிகள் இல்லை என டாக்டர் தஹீர் கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory