» செய்திகள் - விளையாட்டு » உலகம்

நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களை தனியார் மயமாக்க பாகிஸ்தான் திட்டம்!

வியாழன் 23, மே 2024 4:55:58 PM (IST)



கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக நஷ்டத்தில் இயங்கி வரும் அரசுக்கு சொந்தமான நிறுவனங்களை தனியார் மயமாக்க பாகிஸ்தான் அரசு திட்டமிட்டு உள்ளது. 

பாகிஸ்தானில் கடந்த சில ஆண்டுகளாக கடும் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. இதனால் நாட்டின் பண வீக்கம் அதிகரித்து அத்தியாவசிய பொருட்களின் விலை தாறுமாறாக எகிறி உள்ளது. இதனை சமாளிக்க உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் போன்றவற்றிடம் இருந்து கடன்களை வாங்கி சமாளித்து வருகிறது.

இந்நிலையில் நஷ்டத்தில் இயங்கி வரும் அரசுக்கு சொந்தமான நிறுவனங்களை தனியார்மயமாக்க பாகிஸ்தான் அரசு திட்டமிட்டு உள்ளது. இதன் சோதனை முயற்சியாக முதலில் பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் நிறுவனம் தனியார்மயமாக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அதற்கு பிறகு நியூயார்க்கில் உள்ள ரூஸ்வெல்ட் ஓட்டல், ஸ்டேட் லைப் இன்சூரன்ஸ் கார்ப்பரேசன் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்பட உள்ளதாக அங்குள்ள ஊடகங்கள் கூறுகின்றன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory