» செய்திகள் - விளையாட்டு » உலகம்
ஈரானில் கனமழை வெள்ளத்தில் 7 பேர் பலி: 250 பேர் மீட்பு!
சனி 18, மே 2024 11:36:47 AM (IST)

ஈரானில் கனமழை வெள்ளத்தில் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர். வெள்ளத்தில் சிக்கிய 250 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
பாரசிக வளைகுடா நாடுகளில் ஒன்றான ஈரானின் கடந்த சில தினங்களாக இயல்பை காட்டிலும் அதிக அளவு மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் கொரசன் ரசவி மாகாணம் மசாத் நகரில் கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் அங்குள்ள குடியிருப்பு கட்டிடங்கள் நீரில் மூழ்கி தத்தளித்தன. மின்கம்பங்கள், மரங்கள் ஆகியவை வேரோடு பிடுங்கப்பட்டு அடித்துச்செல்லப்பட்டன.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு மின்சார வினியோகம் துண்டிக்கப்பட்டது. 250 பேர் மீட்கப்பட்டு பாதுகாப்பான பகுதிகளுக்கு அழைத்து செல்லப்பட்டனர். வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட காரில் சிக்கி உயிரிழந்த 2 பேர் உள்பட ஈரானில் கனமழைக்கு இதுவரை 7 பேர் உயிரிழந்ததாக அந்தநாட்டின் பேரிடர் மீட்பு நிர்வாகம் தெரிவித்துள்ளது. காணாமல் போன 12 பேரை தேடும் பணி தீவிரமாக நடத்து வருகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஈரான் பாதுகாப்பு அமைச்சகம் மீது இஸ்ரேல் தாக்குதல்: மத்திய கிழக்கில் போர்ப் பதற்றம் அதிகரிப்பு!
ஞாயிறு 15, ஜூன் 2025 11:08:38 AM (IST)

இஸ்ரேல் தாக்குதல்: ஈரான் ராணுவ தளபதிகள், அணு விஞ்ஞானிகள் பலி
வெள்ளி 13, ஜூன் 2025 12:15:19 PM (IST)

ஆமதாபாத் விமான விபத்து அதிர்ச்சியை அளிக்கிறது : பிரிட்டன் பிரதமர் வேதனை!
வியாழன் 12, ஜூன் 2025 4:49:39 PM (IST)

தென் ஆப்பிரிக்காவில் வெள்ளத்தில் சிக்கிய பள்ளி பேருந்து: குழந்தைகள் உட்பட 49 பேர் உயிரிழப்பு
வியாழன் 12, ஜூன் 2025 10:59:18 AM (IST)

அமெரிக்க அதிபர் டிரம்ப் குறித்து விமர்சனம்: வருத்தம் தெரிவித்தார் எலான் மஸ்க்!
புதன் 11, ஜூன் 2025 4:56:11 PM (IST)

குற்றவாளியை போல கைது செய்யப்பட்ட இந்திய மாணவர் : அமெரிக்கா விளக்கம்!
புதன் 11, ஜூன் 2025 11:41:53 AM (IST)
