» செய்திகள் - விளையாட்டு » உலகம்

பிரதமர் மோடிக்கு பூடானின் உயரிய விருது வழங்கி கவுரவிப்பு

சனி 23, மார்ச் 2024 11:22:22 AM (IST)



இரண்டு நாள் பயணமாக பூடான் சென்ற பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் உயரிய விருது வழங்கி  மன்னர் ஜிக்மே கேசர் வழங்கி கவுரவித்தார். 

பூடான் பிரதமர் டோப்கே 5 நாள் பயணமாக கடந்த வாரம் இந்தியா வந்து சென்றார். இந்நிலையில் பிரதமர் மோடி இரண்டு நாள் அரசு முறை பயணமாக நேற்று காலை பூடான் சென்றார். இதற்காக டெல்லியில் இருந்து நேற்று காலை பிரதமர் மோடி விமானத்தில் புறப்பட்டார். இதனை தொடர்ந்து பூடானில் உள்ள பாரோ சர்வதேச விமான நிலையத்திற்கு வந்திறங்கிய பிரதமர் மோடிக்கு அந்நாட்டு அரசு சிவப்பு கம்பள வரவேற்பு அளித்தது. பிரதமர் மோடியை பூடான் பிரதமர் ஷேரிங் டோப்கே வரவேற்றார்.

இதனை தொடர்ந்து நடந்த விழாவில் பிரதமர் மோடிக்கு பூடானின் மிக உயரிய விருதான ‘ஆர்டர் ஆப் தி ட்ரக் கயால்போ’வை மன்னர் ஜிக்மே கேசர் வழங்கி கவுரவித்தார். இந்தியா-பூடான் இடையேயான உறவுகளின் வளர்ச்சிக்கு பிரதமர் மோடி செய்த சிறந்த பங்களிப்பு மற்றும் பூடான் மக்களுக்கு அவர் செய்த சிறப்பான சேவையை பாராட்டி பிரதமர் மோடிக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. 

இந்த விருதை பெறும் முதல் வெளிநாட்டு தலைவர் பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து பூடான் மன்னர் ஜிக்மே கேசர் நம்கெல் வாங்சுக்கை பிரதமர் மோடி சந்தித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital





Thoothukudi Business Directory