» செய்திகள் - விளையாட்டு » உலகம்
இறைதூதரை அவமதித்ததாக இளைஞருக்கு மரண தண்டனை: பாக். நீதிமன்றம் தீர்ப்பு
சனி 9, மார்ச் 2024 5:17:40 PM (IST)
பாகிஸ்தானில் இறைதூதரை அவமதித்ததாக 22 வயது இளைஞருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், 17 வயது சிறுவனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமிய நாடான பாகிஸ்தானில் இஸ்லாமிய மதக்கடவுள் குறித்து, மதக்கடவுளின் இறைதூதர் குறித்து அவதூறு கருத்துகள் தெரிவித்தால், அவமதித்தால் மற்றும் மத நிந்தனையில் ஈடுபட்டால் மரண தண்டனை விதிக்கும் வகையிலான சட்டம் அமலில் உள்ளது. இந்நிலையில், அந்நாட்டின் பஞ்சாப் மாகாணத்தை சேர்ந்த 22 வயது கல்லூரி மாணவன் இஸ்லாமிய மதக்கடவுளின் இறைதூதர் குறித்து அவதூறு கருத்துகள் இடம்பெற்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோவை வாட்ஸ் அப்பில் பகிர்ந்துள்ளார்.
அதை 17 வயதான சிறுவனும் பகிர்ந்துள்ளான். 2022ம் ஆண்டு நடந்த இச்சம்பவம் தொடர்பாக இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு பஞ்சாப் கோர்ட்டில் விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில், இறைதூதர் குறித்து அவதூறு கருத்துகள் இடம்பெற்றிருந்த புகைப்படங்கள், வீடியோக்களை வாட்ஸ் அப்பில் பகிர்ந்த வழக்கில் 22 வயது இளைஞருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதேபோல், 17 வயது சிறுவனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
atheistMar 9, 2024 - 05:29:40 PM | Posted IP 172.7*****
அது எல்லாம் தூதர் பார்த்துக்குவார், உயிரை எடுக்க மக்களுக்கு உரிமை இல்லை, பாகிஸ்தான் ஒரு முட்டாள் நாடு.
truthMar 11, 2024 - 04:02:26 AM | Posted IP 172.7*****