» செய்திகள் - விளையாட்டு » உலகம்

பச்சிளம் குழந்தை உள்பட 6 பேர் கொடூர கொலை: கனடாவில் பயங்கரம்!!

சனி 9, மார்ச் 2024 8:42:28 AM (IST)

கனடாவில் இலங்கை குடும்பத்தினர் மீது மாணவர் ஒருவர் சரமாரியாக கத்தியால குத்தியதில் பச்சிளம் குழந்தை உள்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கனடா தலைநகர் ஒட்டாவா அருகே உள்ள பார்ஹெவன் பகுதியை சேர்ந்தவர் தர்ஷினி (35). இவர் தனது கணவர், 4 குழந்தைகள் மற்றும் உறவினர்களுடன் வசித்து வந்தார். இலங்கையை சேர்ந்த இவர்கள் சமீபத்தில்தான் கனடாவில் குடியேறினர். இந்தநிலையில் தர்ஷினியின் வீட்டில் இருந்து பயங்கர அலறல் சத்தம் கேட்டது. இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தபோது தர்ஷினி, அவரது 2½ மாத குழந்தை உள்பட 6 பேர் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தது போலீசாருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் தர்ஷினியின் கணவர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தார். போலீசார் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் டி சொய்சா (19) என்ற வாலிபர் அவர்கள் அனைவரையும் கத்தியால் குத்தி கொன்றது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இலங்கையை சேர்ந்த இவரும் தர்ஷினியின் வீட்டில் தங்கி கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. எனினும் தாக்குதலுக்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நாட்டையே உலுக்கிய இந்த கொடூர கொலை சம்பவத்துக்கு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital






Thoothukudi Business Directory