» செய்திகள் - விளையாட்டு » உலகம்
பாகிஸ்தான் பிரதமராக ஷாபாஸ் ஷெரீஃப் பொறுப்பேற்பு: பிரதமர் மோடி வாழ்த்து!
செவ்வாய் 5, மார்ச் 2024 10:54:29 AM (IST)
பாகிஸ்தான் பிரதமராக 2-வது முறையாக பதவியேற்றுள்ள ஷாபாஸ் ஷெரீஃப்புக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் 8-ஆம் தேதி நடைபெற்ற நாடாளுமன்றத் தோ்தலில் முன்னாள் பிரதமா் நவாஸ் ஷெரீஃப் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் - நவாஸ் (பிஎம்எல்-என்) கட்சிக்கு 108 இடங்கள் கிடைத்துள்ளன. தடை செய்யப்பட்ட முன்னாள் பிரதமா் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் (பிடிஐ) கட்சியின் ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளா்கள் 93 தொகுதிகளில் வெற்றி பெற்றனா்.
முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சா் பிலாவல் புட்டோ ஜா்தாரியின் தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சி (பிபிபி) 68 இடங்களுடன் 3-ஆவது இடத்தைப் பிடித்தது. இந்தச் சூழலில், ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இம்ரான் கான் எந்தக் கட்சியுடனும் கூட்டணி ஏற்படுத்தி ஆட்சியமைக்கப்போவதில்லை என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டாா். அதையடுத்து, பிபிபி மற்றும் பிற கட்சிகளின் ஆதரவுடன் பிஎம்எல்-என் கட்சி ஆட்சியமைக்கிறது.
அந்த கூட்டணியின் பொதுவேட்பாளராக ஷாபாஸ் ஷெரீஃப் அறிவிக்கப்பட்டாா். இது தொடா்பாக நாடாளுமன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வாக்கெடுப்பில் ஷாபாஸ் ஷெரீஃப் வெற்றி பெற்றாா். இந்த நிலையில், இஸ்லாபாதிலுள்ள அதிபா் மாளிகையில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் நாட்டின் 24-ஆவது பிரதமராக அவா் பொறுப்பேற்றுக்கொண்டாா்.
இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமராக 2-வது முறையாக பதவியேற்றுள்ள ஷாபாஸ் ஷெரீஃப்புக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, "பாகிஸ்தானின் பிரதமராக பதவியேற்ற ஷாபாஸ் ஷெரீப்ஃபுக்கு வாழ்த்துகள்” என்று தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.