» செய்திகள் - விளையாட்டு » உலகம்
பூமியின் மீது செயற்கைகோள் விழும் அபாயம்: ஐரோப்பா விண்வெளி நிறுவனம் தகவல்!
வியாழன் 22, பிப்ரவரி 2024 11:18:08 AM (IST)

செயலிழந்த செயற்கைகோள் பூமியில் விழும் அபாயம் உள்ளதாக ஐரோப்பா விண்வெளி நிறுவனம் அச்சம் தெரிவித்துள்ளது.
கடந்த 1990-ம் ஆண்டில் ஓசோன் படலத்தை கண்காணிக்கும் வகையில் ஒரு செயற்கைகோளை ஐரோப்பா விண்வெளி ஆய்வு நிறுவனம் விண்ணில் செலுத்தியது. 'கிராண்ட்பாதர்' என பெயரிடப்பட்ட இந்த விண்கலனை ஐரோப்பா விண்வெளி நிறுவனம் கட்டுப்படுத்தி இயக்கி வந்தது. இதனையடுத்து அதன் ஆயுட்காலம் முடிவடைந்து தன்னுடைய சுற்றுப்பாதையை விட்டு விலகியது.
இந்தநிலையில் கிராண்ட்பாதர் செயற்கைகோளின் உடைந்த பாகங்கள் பூமியின் மீது விழும் அபாயம் உள்ளதாக ஐரோப்பா விண்வெளி நிறுவன விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த மாதம் இறுதிக்குள் அது பூமியில் விழலாம் என கணக்கீடப்பட்டு உள்ளது.
இதனை கட்டுப்படுத்த முடியாத காரணத்தினால் எங்கு விழும் என சொல்லமுடியவில்லை, இருப்பினும் ஐரோப்பாவில் உள்ள கடல்களில் விழ வைக்க முயற்சிகள் நடக்கின்றன. இதன் பெருமளவிலான பாகங்கள் எரிந்து சாம்பலாகிவிடும். ஆனால் சில பாகங்கள் வளிமண்டலத்தை தாண்டி பூமியில் விழும் வாய்ப்பு இருப்பதாக விஞ்ஞானிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அமெரிக்காவில் இருந்து இதுவரை 388 இந்தியர்கள் நாடு கடத்தல்: மத்திய அரசு தகவல்!
சனி 22, மார்ச் 2025 11:00:16 AM (IST)

அமெரிக்க அரசின் கல்வித்துறை கலைப்பு: அதிபர் அதிபர் டொனால்டு டிரம்ப் அதிரடி!
வெள்ளி 21, மார்ச் 2025 11:15:31 AM (IST)

ஹமாஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு: இந்திய வம்சாவளி நபர் கைது!
வியாழன் 20, மார்ச் 2025 4:17:52 PM (IST)

உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர ரஷியா ஒப்புதல் : வெள்ளை மாளிகை அறிவிப்பு
வியாழன் 20, மார்ச் 2025 11:31:13 AM (IST)

ஜோ பைடன் நிர்வாகத்தால் சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு வருவது தாமதம் : எலான் மஸ்க் குற்றச்சாட்டு
புதன் 19, மார்ச் 2025 5:33:03 PM (IST)

டிராகன் விண்கலம் மூலம் 9 மாதங்களுக்குப் பிறகு பாதுகாப்பாக பூமி திரும்பினார் சுனிதா வில்லியம்ஸ்!
புதன் 19, மார்ச் 2025 10:09:07 AM (IST)
