» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
தேர்தல் ஆணையம் மீதான நம்பிக்கையை உடைக்க முயற்சி: ராகுலை கண்டித்து 272 பிரமுகர்கள் கடிதம்!
வியாழன் 20, நவம்பர் 2025 10:32:13 AM (IST)
தேர்தல் ஆணையம் மீதான நம்பிக்கையை உடைக்க காங்கிரஸ் கட்சி முயற்சிப்பதாக ஓய்வுபெற்ற நீதிபதிகள், உயர் அதிகாரிகள் உள்ளிட்ட 272 முக்கிய பிரமுகர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
நீதித் துறையின் செயல்பாட்டையும் சந்தேகிக்கின்றனர். நாடாளுமன்றத்தையும் அதன் அதிகாரிகளையும் குறை கூறுகின்றனர். இப்போது அதேமுறையில் இந்திய தேர்தல் ஆணையத்தின் நேர்மை கண்ணியத்தின் மீது குறை கூறுகிறார்கள்.
குறிப்பாக, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி (எஸ்ஐஆர்) என்ற பெயரில் தேர்தல் ஆணையம் தொடர்ந்து வாக்குகளை திருடுவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டி வருகிறார். தேர்தல் ஆணையத்துக்கு எதிராக 100% ஆதாரம் இருக்கிறது என்றும் ஹைட்ரஜன் குண்டு இருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார். ஆனால், அதற்கு உரிய ஆதாரங்களை அவர் வழங்கவில்லை.
காங்கிரஸ் கட்சியின் பிற தலைவர்கள், பிற எதிர்க்கட்சித் தலைவர்கள், சில தன்னார்வு தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்டவையும் இதே மாதிரியான குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றன. ஆனால் இவை அனைத்தும் அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் என ஆய்வில் தெரியவந்துள்ளது.
தேர்தல் ஆணையம் எஸ்ஐஆர் நடைமுறையை வெளிப்படையாக தெரிவித்துள்ளது. இதன்மூலம் நீதிமன்ற உத்தரவின்படி இந்த பணி நடைபெறுவது தெரிகிறது. தகுதியற்ற பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு, தகுதியுடைய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து தேர்தலில் தோல்வி அடையும் அரசியல் கட்சிகள் விரக்தியடைந்து இதுபோன்ற குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றன. தேர்தல் ஆணையம் தனது வெளிப்படைத் தன்மையை தொடர வேண்டும். அதேநேரம், அரசியல் சாசன அமைப்புகளின் செயல்முறையை அரசியல் கட்சித் தலைவர்கள் மதிக்க வேண்டும். ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கக் கூடாது. ஜனநாயக தீர்ப்பை ஏற்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஒரே நாளில் டெலிவரி: அஞ்சல் துறை சார்பில் புதிய சேவை இன்று அறிமுகம்!
செவ்வாய் 17, மார்ச் 2026 12:13:32 PM (IST)

அலுமினிய பாத்திரங்களுக்கு ஐ.எஸ்.ஐ. தரச்சான்று கட்டாயம்: மத்திய அரசு அதிரடி உத்தரவு
செவ்வாய் 17, மார்ச் 2026 11:46:00 AM (IST)

குடிப்பழக்கத்தால் பாதிப்பு: தந்தைக்குத் கல்லீரலைத் தானமாக வழங்கி உயிர் கொடுத்த மகள்!
செவ்வாய் 17, மார்ச் 2026 11:34:53 AM (IST)

கல்வி உதவித்தொகையில் ரூ.11 கோடி மோசடி: அரசு அதிகாரிகள் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு
செவ்வாய் 17, மார்ச் 2026 8:44:19 AM (IST)

மக்களவை மாண்பைக் காப்பதில் ஓம் பிர்லா உறுதி: சபாநாயகருக்குப் பிரதமர் மோடி பாராட்டு!
திங்கள் 16, மார்ச் 2026 5:43:33 PM (IST)

ஒடிசா மருத்துவமனையில் தீ விபத்தில் 10 பேர் உயிரிழப்பு - ரூ.25 லட்சம் நிவாரண நிதி!
திங்கள் 16, மார்ச் 2026 5:38:50 PM (IST)








