» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

தொழிலதிபரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று மகன் தற்கொலை: குடிபோதையில் வெறிச்செயல்!

புதன் 5, நவம்பர் 2025 12:15:26 PM (IST)

உத்தர பிரதேசத்​தைச் சேர்ந்த தொழிலதிபர் சுரேஷ் சந்த் அகர்​வாலை அவரது மகன் துப்​பாக்​கி​யால் சுட்​டுக் கொன்​று தற்கொலை செய்து கொண்டார். 

உத்தர பிரதேசத்​தைச் சேர்ந்த சுரேஷ் சந்த் அகர்​வால், கடந்த 1977-ம் ஆண்டு தினேஷ் 555 பீடி பிராண்டை நிறு​வி​னார். இந்த பிராண்டை பிஹார், ஜார்க்​கண்ட், மத்​திய பிரதேசம் உள்​ளிட்ட மாநிலங்​களுக்​கும் விரிவுபடுத்​தி​னார். புற்று நோயால் பாதிக்​கப்​பட்ட சுரேஷ் சந்த் அகர்​வால், உத்தர பிரதேசத்​தின் விரிந்​தாவன் நகரில் வசித்து வந்​தார்.

இந்​நிலை​யில், சுரேஷ் சந்த் அகர்​வாலை அவரது மகன் இரு தினங்​களுக்கு முன்பு துப்​பாக்​கி​யால் சுட்​டுக் கொன்​றார். பின்​னர் அதே துப்​பாக்​கி​யால் தானும் சுட்டு தற்​கொலை செய்து கொண்​டார். இதுகுறித்து போலீ​ஸார் கூறும்​போது, "சுரேஷ் சந்த் மகன் நரேஷ் அகர்​வால் மது பழக்​கத்​துக்கு அடிமை​யாக இருந்​துள்​ளார். இதைக் கண்​டித்​த​தால் தந்தை மகன் இடையே அடிக்​கடி தகராறு ஏற்​பட்​டுள்​ளது. 

அந்த வகை​யில் ஆத்​திரமடைந்த நரேஷ் துப்​பாக்​கியால் தந்​தையை சுட்​டுள்​ளார். பின்​னர் அவர், அதே துப்​பாக்​கி​யால் தன்னை சுட்டு தற்​கொலை செய்து கொண்​டுள்​ளார். இதில் இரு​வரும் சம்பவ இடத்​திலேயே உயி​ரிழந்​தனர்​’’ என்​றனர்​.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital




CSC Computer Education




Thoothukudi Business Directory