» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கச்சா எண்ணெய் விலை குறித்து தேவையற்ற கவலை வேண்டாம்: பெட்ரோலியத்துறை அமைச்சர்

வெள்ளி 20, ஜூன் 2025 12:06:15 PM (IST)

மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், கச்சா எண்ணெய் விலை கட்டுக்குள் இருக்கிறது'' என மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி கூறினார்.

ஈரான்- இஸ்ரேல் மோதல் ஒருவரத்திற்கும் மேலாக நீடித்து வருகிறது. நாளுக்கு நாள் பதற்றம் அதிகரித்துக்கொண்டே வருவதால், கச்சா எண்ணெய் விலை உயரக்கூடும் என்ற கவலை எழுந்துள்ளது. இந்த சூழலில், கச்சா எண்ணெய் விலை உயருமா என்ற கேள்விக்கு, மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி அளித்த பதில் வருமாறு;

கச்சா எண்ணெய் விலை நிலையாக, சமாளிக்கக் கூடியதாக உள்ளது. உலகளாவிய எரிசக்தி விலை கட்டுப்பாட்டில் இருக்கிறது. உலகில் எண்ணெய் பற்றாக்குறை இல்லை. நாங்கள் நிலைமையைக் கண்காணித்து வருகிறோம். மத்திய கிழக்கில் மோதல் தொடங்கிய போது, கச்சா எண்ணெய் விலை பீப்பாய் 100 டாலர் தாண்டுமோ என கவலை எழுந்தது.

இருப்பினும், கடந்த சில மாதங்களாக, கச்சா எண்ணெய் விலை கட்டுக்குள் இருக்கிறது. அமெரிக்கா, கனடா போன்ற மேற்கத்திய நாடுகளிலிருந்து அதிக எண்ணெய் சந்தைக்கு வருகிறது. இஸ்ரேல்-ஈரான் மோதலில் வணிகக் கப்பல்கள் மற்றும் எண்ணெய் டேங்கர்கள் இதுவரை குறிவைக்கப்படவில்லை என்பதால் தான் தேவையற்ற கவலை வேண்டாம்" என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


CSC Computer Education




Arputham Hospital


New Shape Tailors



Thoothukudi Business Directory