» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பவன் கல்யாண் கட்சிக்கு ரூ.5 கோடி நன்கொடை வழங்கிய நடிகர் சிரஞ்சீவி!

செவ்வாய் 9, ஏப்ரல் 2024 12:21:11 PM (IST)



தனது தம்பியான பவன் கல்யாணின் ஜன சேனா கட்சிக்கு தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி, ரூ.5 கோடி நன்கொடை வழங்கியுள்ளார்.

தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் ஜன சேனா என்ற பெயரில் கட்சி தொடங்கி அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் வரப்போகிற நாடாளுமன்ற தேர்தலுக்காக நிதி திரட்டுவதில் பவன் கல்யாண் மும்முரமாக உள்ளார். இதனையடுத்து தெலுங்கு சினிமா சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி, பவன் கல்யாணின் ஜன சேனா கட்சிக்கு ரூ.5 கோடி நன்கொடையாக வழங்கியுள்ளார்.

படப்பிடிப்பில் இருந்த அவரை அங்கு சென்று பவன் கல்யாண் நேரடியாக சந்தித்த நிலையில் ரூ.5 கோடிக்கான காசோலையை சிரஞ்சீவி அவரிடம் வழங்கினார். பின்னர் பவன் கல்யாண் கட்சி நிர்வாகிகளுடன் சிரஞ்சீவிடம் ஆசி பெற்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital











Thoothukudi Business Directory