» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

குடியரசு தின விழாவில் மத்திய அரசை அவமதித்த நீதிமன்ற அதிகாரிகள் சஸ்பெண்ட்!

சனி 27, ஜனவரி 2024 12:40:38 PM (IST)

குடியரசு தின நிகழ்ச்சியில் மத்திய அரசை அவமதிப்பு செய்த உயர்நீதிமன்ற அதிகாரிகள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

நாட்டின் 75வது குடியரசு தினம் நேற்று நாடு முழுவதும் விமரிசையாக கொண்டாடப்பட்டது. அந்த வகையில், கேரளத்தின் கொச்சியில் அமைந்துள்ள கேரள தலைமை உயர்நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற குடியரசு தின நிகழ்ச்சியின் போது, மத்திய அரசை அவமதிக்கும் வகையில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து, நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்த உயர்நீதிமன்ற அதிகாரிகள் இருவரை உடனடியாக பணியிடைநீக்கம் செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி விரைவில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது துறை ரீதியிலான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் உயர்நீதிமன்றம் தரப்பில் வெளியிட்டுள்ள ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads








Arputham Hospital




Thoothukudi Business Directory