» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
பெண் நிருபர் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கு : 4 பேருக்கு ஆயுள் தண்டனை
ஞாயிறு 26, நவம்பர் 2023 10:44:19 AM (IST)
டி.வி. பெண் நிருபர் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து டெல்லி நீதிமன்றம் தீர்ப்பு கூறியது. மற்றொருவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

சவும்யா காரை வேகமாக ஓட்டிச்செல்ல முயன்றதால் ஆத்திரமடைந்த அவர்கள், ஒரு நாட்டுத் துப்பாக்கியால் அவரை சுட்டனர். அதில் சவும்யா பரிதாபமாக பலியானார். இந்த படுகொலை தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரித்த போலீசார், ரவி கபூர், அமித் சுக்லா, பல்ஜீத் மாலிக், அஜய்குமார், அஜய் சேத்தி ஆகிய 5 பேரை கைது செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த டெல்லி சாகேத் மாவட்ட கோர்ட்டு, 5 பேரும் குற்றவாளிகள் என கடந்த அக்டோபர் 18-ந்தேதி தீர்ப்பு அளித்தது. அவர்களுக்கான தண்டனை விவரத்தை நீதிபதி நேற்று அறிவித்தார். அதன்படி, ரவி கபூர், அமித் சுக்லா, பல்ஜீத் மாலிக், அஜய்குமார் ஆகிய 4 பேருக்கும் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டது. அவர்களுக்கு தலா ரூ.1.25 லட்சம் அபராதத்தையும் நீதிபதி விதித்தார்.
5-வது குற்றவாளியான அஜய் சேத்திக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.7.25 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. அபராத தொகை மொத்தம் ரூ.12 லட்சத்தை சவும்யாவின் பெற்றோருக்கு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார். குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட வேண்டும் அரசு தரப்பு வாதத்தை நிராகரித்த நீதிபதி, இது அரிதிலும் அரிதான வழக்கு என்ற பிரிவின் கீழ் வராது என்பதால், குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்க முடியாது என்று தெரிவித்தார்.
தீர்ப்பு குறித்து கருத்து கூறிய சவும்யா விஸ்வநாதனின் தாயார் மாதவி, ‘தற்போது எனது கணவர் பைபாஸ் அறுவைசிகிச்சை செய்யப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கிறார். கோர்ட்டின் இந்த தீர்ப்பால் நான் திருப்தி அடைந்திருக்கிறேன். ஆனால் மகிழ்ச்சி அடையவில்லை’ என்றார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பெங்களூருவில் ஒரே இரவில் 100 மி.மீ கனமழை: சாலைகளில் வெள்ளம்; போக்குவரத்து பாதிப்பு!
திங்கள் 19, மே 2025 5:48:34 PM (IST)

காருக்குள் விளையாடிய 4 குழந்தைகள் மூச்சு திணறி உயிரிழப்பு: ஆந்திராவில் சோகம்!
திங்கள் 19, மே 2025 11:25:47 AM (IST)

தீ விபத்தில் 8 குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 17 பேர் பலி: ஹைதராபாத்தில் சோகம்
ஞாயிறு 18, மே 2025 9:25:13 PM (IST)

மத்திய அரசு அறிவித்த குழுவில் சசி தரூர் பெயர் இடம்பெற்றது நேர்மையற்றது: ஜெய்ராம் ரமேஷ்
சனி 17, மே 2025 4:49:28 PM (IST)

பாகிஸ்தானுக்கு நிதி அளிப்பது பயங்கரவாதத்துக்கு மறைமுக ஆதரவுக்கு சமம்: ராஜ்நாத் சிங்
சனி 17, மே 2025 12:03:28 PM (IST)

இண்டியா கூட்டணியின் எதிர்காலம் பிரகாசமாக இல்லை: ப.சிதம்பரம் கவலை
வெள்ளி 16, மே 2025 4:36:27 PM (IST)
