» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
வீட்டின் தனி அறையில் 22 நாய்களுடன் அடைத்து வைக்கப்பட்ட சிறுவன்- பெற்றோர் மீது வழக்கு!
சனி 14, மே 2022 11:40:12 AM (IST)
புனேயில் தனி அறையில் 20க்கும் மேற்பட்ட நாய்களுடன் 11 வயது சிறுவனை அடைத்து வைத்த பெற்றோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
புனே கோந்துவா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் உள்ளே 11 வயது சிறுவன் ஜன்னல் ஓரமாக அமர்ந்து இருப்பதையும், அவனுடன் அங்கு பல நாய்கள் இருந்ததையும் நபர் ஒருவர் கண்டார். மேலும், சிறுவன் அடைத்து வைக்கப்பட்டு இருப்பதை அறிந்த நபர் இதுபற்றி மாவட்ட குழந்தைகள் நல அதிகாரியை தொடர்புகொண்டு விவரத்தை தெரிவித்தார்.
இதன்பேரில் கடந்த 9-ந் தேதி அதிகாரி ஒருவர் சிறுவன் வீட்டிற்கு சென்றபோது, 20 முதல் 22 நாய்களுடன் சிறுவன் வீட்டில் அடைத்து வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. மேலும் வீட்டில் இருந்து பயங்கர தூர்நாற்றமும் வீசியது. இதையடுத்து அதிகாரி சிறுவனை மீட்டு குழந்தைகள் நல காப்பகத்தில் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக சிறுவனின் பெற்றோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மக்களுடன் காங்கிரஸ் கட்சிக்கு இருந்த தொடர்பு முறிந்த நிலையில் உள்ளது : ராகுல் காந்தி பேச்சு!
திங்கள் 16, மே 2022 10:46:41 AM (IST)

மத்தியப் பிரதேசத்தில் 3 காவலர்கள் சுட்டுக் கொலை: வேட்டைக்காரர்கள் வெறிச்செயல்!
சனி 14, மே 2022 5:35:40 PM (IST)

கோதுமை ஏற்றுமதிக்கு தடை: விவசாயிகளுக்கு எதிரான நடவடிக்கை - ப.சிதம்பரம் குற்றச்சாட்டு!!
சனி 14, மே 2022 3:47:34 PM (IST)

டெல்லியில் 4 மாடி வணிக கட்டிடத்தில் தீவிபத்து: 27 பேர் உயிரிழப்பு - பிரதமர் மோடி இரங்கல்!
சனி 14, மே 2022 12:15:06 PM (IST)

வெளிநாடுகளுக்கு கோதுமை ஏற்றுமதிக்கு தடை: மத்திய அரசு திடீர் உத்தரவு
சனி 14, மே 2022 10:22:52 AM (IST)

தாஜ்மகாலில் 22 அறைகளை திறக்க கோரிய மனு தள்ளுபடி: மனுதாரருக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்!
வெள்ளி 13, மே 2022 4:59:46 PM (IST)
