தூத்துக்குடி மாநகராட்சி புதிய கட்டிடம் ஸ்டாலின் திறந்து வைத்தார்!

தூத்துக்குடி மாநகராட்சி புதிய கட்டிடம் ஸ்டாலின் திறந்து வைத்தார்!
பதிவு செய்த நாள் சனி 7, ஆகஸ்ட் 2010
நேரம் 12:45:14 PM (IST)

தூத்துக்குடி நகராட்சி, மாநகராட்சியாக அந்தஸ்து பெற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் பாளையங்கோட்டை ரோட்டில், காய்கறி மார்க்கெட் அருகே மாநகராட்சிக்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இன்று புதிய கட்டிடத்தை துனை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். பின்னர் மாநகராட்சி கட்டிட வளாகத்தை பார்வையிட்டார். இவ்விழாவில் மாநில சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன்,மாவட்ட ஆட்சியர் கோ.பிரகாஷ். மாநகர மேயர் கஸ்தூரி தங்கம், பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ஜெயதுரை,மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கபில் சரட்கர்.ஆனையர் குபேந்திரன்,பொறியாளர் ராஜகோபால், துறைமுக பொறுப்புக்கழக உறுப்பினர் என்.பெரியசாமி மற்றும் மாநக‌ர் மன்ற உறுப்பினர்கள் கலந்து கொன்டனர்.‌



Thoothukudi Business Directory