தூத்துக்குடியின் வரலாறு (9 of 10)

புதிய துறைமுகம் வளர்ச்சி

1920ம் ஆண்டு முதல் ஒரு முதிர்ச்சியடைந்த துறைமுகம் தேவை என்று உணர ஆரம்பித்தனர். 1930ல் சென்னை அரசாங்கம் சன் வால்டே பாரிலிஸ்டரின் பங்காளிகளையும் (Partner) தூத்துக்குடியில் ஓர் ஆழமான கடல் துறைமுகத்தை அமைப்பதற்கு சாத்தியக் கூறுகளையும், பரிசீலனை செய்ய நியமித்தது.

பெரிய துறைமுகம் அமைப்பதற்கு சாதகமாக உள்ளது என்று சர்.வாட்வேஹரி ஒரு திட்டம் சமர்ப்பித்தார். இதற்கு முற்றிலும் மாறாக சன்.ராபர்ட் பிரிஸ்டவ் ஒரு திட்டத்தை படைத்தார். அத்திட்டத்தின் பெயர் சர் பிரிஸ்டவ் திட்டம். அவர் திட்டத்தின்படி ஆழ்கடல் துறைமுகம் முயல்தீவில் கட்டப்பட வேண்டும் அதன் மதிப்பீடு 60லட்சம் ரூபாய் ஆகும். இதை பரிசீலனை செய்ய அரசாங்கம் "பால்மர் குழு" என்றழைக்கப்பட்ட ஒரு நிபுணர் குழுவை அமைத்து அந்தக் குழு பிரிஸ்டவ் திட்டத்திற்கு சில புதிய அம்சங்களை சேர்த்தது. அதாவது முயல்தீவில் ஒரு கால்வாய் தோண்டப்பட்டு கடற்கரையின் முன் பகுதியிலேயே துறைமுகம் கட்டப்படவேண்டும். இந்த அமைப்பிற்கு 200ஏக்கர் தரைப்பகுதி ஆக்கிரமிப்பு செய்ய யோசனை கூறப்பட்டது.

இரு திட்டங்களுக்கும் செலவு தொகையை மதிப்பிட பிரிஸ்டவ் குழு மீண்டும் கோரப்பட்டது. பிரிஸ்டவ் திட்டத்திற்கு 120 லட்சம் ரூபாயும், பால்மர் திட்டத்திற்கு 160 லட்சம் ரூபாயும் மதிப்பிடப்பட்டது. இவ்வளவு அதிகமான செலவுக்கு அரசாங்கம் தயாராக இல்லாததால் திட்டடங்கள் அமுல் நடத்துவது 1930ல் தள்ளிப்போடப்பட்டது.


இதற்கிடையில் தொழிலும், வியாபாரமும் வளர்ச்சியடைந்து கொண்டேயிருக்கிறது. ஏனெனில் புதிய ரோடுகளும், இருப்புப் பாதைகளும், போக்குவரத்து வசதிகளை அதிகரிக்கவே, தூத்துக்குடி பின்னணியாக விளங்கிய முக்கிய இடங்களுடன் அவையெல்லாம் இணைக்கப்பட்டன. உற்பத்தி பொருட்களும் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய, தூத்துக்குடி துறைமுகத்தில் குவிந்துகொண்டிருந்தன.

1930ல் மாகானம் முழுவதும் அகல பாதைகள் போட திட்டம் வகுக்க, அரசாங்கம் திரு.விப்பனை நியமித்தது. திருநெல்வேலி மாவட்டத்தின் நிலையைப் பற்றி அவர் குறிப்பிடும்போது, மிகவும் முக்கியம் வாய்ந்த தூத்துக்குடி துறைமுகம் நெடுஞ்சாலை ரோடுகளுக்கு தூரம் என்று கூறி, தூத்துக்குடியுடன் அவைகளை இணைக்கும் ஓர் போக்குவரத்து திட்டத்தை வரைந்து கொடுத்தார். அவர் கருத்தின்படி, வணிகப் பொருட்கள் தூத்துக்குடிக்கு எளிதில் வந்து சேருவதற்கு வசதியாக பல பெரிய ரோடுகள் போடப்பட்டன. ஆனால் துறைமுகத்தை விரிவாக்க திட்டம்,1939-லும் 1940-லும் மேலும் யோசிக்கப்பட்டு, நிதிக்குறைவால் கைவிடப்பட்டது.


Favorite tags



Thoothukudi Business Directory