» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
செய்துங்கநல்லூர் பள்ளியில் ஹிரோஷிமா தினம்
புதன் 7, ஆகஸ்ட் 2024 12:50:05 PM (IST)

செய்துங்கநல்லூர் ஆர்.சி. நடுநிலைப்பள்ளியில் ஹிரோஷிமா தினம் கடைபிடிக்கப்பட்டது.
ஹிரோஷிமாவில் அணுகுண்டு வீசப்பட்ட ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 6ஆம் தேதி ஹிரோஷிமா தினம் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூர் ஆர்.சி. நடுநிலைப்பள்ளியில் ஹிரோஷிமா தினம் கடைபிடிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து தலைமை ஆசிரியர் அருட்சகோ. ஜெபமாலை பேசினார்.
"உலகினை அழிக்கும் யுத்தமே வேண்டாம் வேண்டும் சமாதானம் என குழந்தைகள் பாடலை பாடினர். அறிவியல் தூதன் முத்துசாமி வன்னியப்பன் ஹிரோஷிமா நினைவு தின சடகோ கொக்கு செய்து காட்டினார். பின் அறிவியல் மன்றம் சார்பில் மாணவர்களுக்கு டெலஸ்கோப் மூலம் தொலைவில் உள்ள காட்சிகள் காண்பிக்கப்பட்டது. நிறைவாக ஆசிரியர் மைக்கேல் அருளானந்தம் நன்றியுரை வழங்கினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி வ.உ.சி கல்வியியல் கல்லூரியில் கவின் கலைவிழா
திங்கள் 19, மே 2025 10:09:10 AM (IST)

10ம் வகுப்பு பொதுத் தேர்வு: கீழராமசாமியாபுரம் புனித அன்னாள் பள்ளி 100% தேர்ச்சி
ஞாயிறு 18, மே 2025 12:03:23 PM (IST)

தூத்துக்குடியில் சிறார்களுக்கான கோடை கால சிறப்பு முகாம்!
சனி 17, மே 2025 3:15:10 PM (IST)

நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் பொறியியல் கல்லூரியில் மாணவர் பேரவை நிறைவு விழா!
வெள்ளி 9, மே 2025 4:46:16 PM (IST)

பிளஸ் 2 பொதுத்தேர்வு: கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில் சிறப்பிடம் பெற்றவர்களின் விவரம்!
வெள்ளி 9, மே 2025 11:06:15 AM (IST)

நாகலாபுரம் பள்ளியில் ஆங்கிலப் பயிற்சி முகாம்!
வியாழன் 8, மே 2025 8:07:28 AM (IST)
