» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

காயல்பட்டினம் பாத்திமா பள்ளியில் ஆண்டு விழா

வியாழன் 23, மார்ச் 2023 11:04:22 AM (IST)



காயல்பட்டினம் பாத்திமா மழலையர் மற்றும் துவக்கப் பள்ளி ஆண்டுவிழா குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக நடந்தது.

விழாவில் பள்ளி நிர்வாகி அஷரப் தலைமை வகித்து வரவேற் றார்.பள்ளி முதல்வர் கிப்ட்லின் ஆண்டறிக்கை சமர்ப்பித்தார். ஆசிரியை சாந்தி முன்னிலை வகித்தார். காயல்பட்டினம் சென்ட்ரல் மெட்ரிக் பள்ளி முதல்வர் செண்பகவள்ளி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார்.மாணவ மாணவிகளின் நடனம் நாடகம் மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றன.

மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.இதில் ஆறுமுகநேரி- இராஜமன்யபுரம் டிஎன்டிடிஏ நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை கலையரசி சித்ரா மற்றும் ஆசிரியைகள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.பள்ளி ஆலோசகர் எமிடெய்சி கிறிஸ்டி நன்றி கூறினார்.ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகி அஷரப் தலைமையில் ஆசிரியைகள் அலுவலர்கள் செய்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory