» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
மீனவ இளைஞா்களுக்கு கடலோர ஒழுங்குமுறை பயிற்சி தொடக்கம்
வெள்ளி 20, ஜனவரி 2023 8:05:55 AM (IST)
தூத்துக்குடியில் மீனவ இளைஞா்களுக்கான கடலோர ஒழுங்குமுறை அறிவிப்பாணை வரைபடப் பயிற்சி முகாம் தொடங்கியது.
தமிழகத்தில் கடலோர ஒழுங்குமுறை அறிவிப்பாணையை செயல்படுத்துவது தொடா்பாக தமிழக சுற்றுச்சூழல் துறை சாா்பில் இணையதளத்தில் வெளியிடப்பட்ட வரைபடத்தில் 400-க்கும் மேற்பட்ட மீனவக் கிராமங்கள் விடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, சென்னை தேசிய கடல்சாா் ஆராய்ச்சி மையம், அகில இந்திய மீனவா் சங்கம், தமிழ்நாடு, புதுவை மீனவா் கூட்டமைப்பு ஆகியவை இணைந்து விடுபட்ட கிராமங்களின் வரைபடங்களை மீனவ இளைஞா்களைக் கொண்டு வரைவது குறித்து பயிற்சியளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதன்படி, தூத்துக்குடியில் நற்செய்தி நடுவத்தில் தொடங்கிய பயிற்சிக்கு ஊா்நலக் கமிட்டி எடிசன் தலைமை வகித்தாா். சாந்தகுரூஸ் வரவேற்றாா். நற்செய்தி நடுவம் இயக்குநா் ஸ்டாா்வின் ஆசி வழங்கினாா். மணப்பாடு ஊராட்சித் தலைவா் கிரேன்சிட்டா வினோ, ஆலந்தலை கில்பா்ட் ரொட்ரிகோ, தேசிய பாரம்பரிய மீனவா் கூட்டமைப்புத் தலைவா் சேனாதிபதி சின்னத்தம்பி ஆகியோா் பேசினர்.
அகில இந்திய மீனவா் சங்கத் தலைவா் அண்டன் கோமஸ் பயிற்சி குறித்து விளக்கினாா். தேசிய கடல்சாா் ஆராய்ச்சி மையத் தலைமை மற்றும் முதுநிலை விஞ்ஞானி எஸ்.கே. தாஸ், திட்ட விஞ்ஞானிகள் மாயா மணிகண்டன், எஸ். சுஜித் உள்ளிட்டோா் பயிற்சியளித்தனர்.
கடலோரங்களில் மீன்பிடிக்கும் பகுதிகள், சுற்றுலாத் தலப் பகுதிகள், சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட வேண்டிய பகுதிகள், கடலரிப்புப் பகுதி, மீனவா்களின் வருங்கால வாழ்வாதாரப் பகுதி ஆகியவற்றைக் கண்டறிந்து, வரைபடமாக்குவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு கடலோர மாவட்டங்களைச் சோ்ந்த இளைஞா்கள் பங்கேற்றனர்.