» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

குளத்தூர் டிஎம்எம் கல்லூரியில் திறனறியும் போட்டிகள்

வியாழன் 19, ஜனவரி 2023 5:03:42 PM (IST)



குளத்தூர் டிஎம்எம் கல்லூரியில் பள்ளி மாணவ மாணவிகளுக்கான திறனறியும் போட்டிகள் 2023 நடைபெற்றது. 

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தாலுகா குளத்தூர் டிஎம்எம் கல்லூரியில் பள்ளி மாணவ மாணவிகளுக்கான திறனறியும் போட்டிகள் 2023 நடைபெற்றது. கல்லூரியின் இயக்குனர்  கோபால் தலைமையேற்றார். ஆங்கிலத்துறை பேராசிரியை செல்வி பிரதீபா வரவேற்புரை ஆற்றினார். கல்லூரியின் முதல்வர்  அன்பழகன் வாழ்த்துரை வழங்கி போட்டிகளை தொடங்கி வைத்தார். வண்ணக் கோலம் இடுதல், பேச்சு போட்டி, ஓவிய போட்டி, தனி நடன போட்டி, வார்த்தைகளை சேர்க்கும் போட்டி, குழு நடன போட்டி என பல்வேறு விதமான போட்டிகள் நடத்தப்பட்டன. 

மாணவ மாணவிகள் அனைத்து போட்டிகளிலும் ஆர்வத்தோடு கலந்து கொண்டனர். ஒவ்வொரு போட்டியிலும் முதல் இரண்டு இடங்களை வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளும் பதக்கங்களும் வழங்கப்பட்டன. பங்கேற்ற அனைத்து மாணவ மாணவிகளுக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. கல்லூரியின் தமிழ் துறை பேராசிரியை  அன்னலட்சுமி நன்றி உரை வழங்கினார். தமிழ்த்துறை பேராசிரியர்கள் மகாலட்சுமி மற்றும் செல்வி பிரீத்தி ஆகியோர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினர். விழா ஏற்பாடுகளை கணிதத்துறை பேராசிரியை செல்வ லட்சுமி மற்றும் அனைத்து பேராசிரியர்கள் செய்திருந்தனர். 



மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory