» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி!
வெள்ளி 13, ஜனவரி 2023 10:53:34 AM (IST)
நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியில் 9-வது தமிழ்நாடு சிக்னல் கம்பெனி என்.சி.சி - திருநெல்வேலி சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணிக்கு ஜூனியர் கமிஷனர் அதிகாரி கணேசன் தலைமை தாங்கினார். தலைமையாசிரியர் ஜெபக ரன்பிரேம்குமார் முன்னி லைவகித்தார்.நாசரேத் காவல் நிலைய உதவி ஆய் வாளர் ராய்ஸ்டன் கொடிய சைத்துவைத்து பேரணியை தொடங்கிவைத்தார்.பேரணியில் உதவி ஆய்வாளர் கள் எபநேசர், சீயோன்ராஜா, செல்வின்ராஜ், காவலர்கள் வேல்பாண்டியன், ராதா ஆகியோர் கலந்து கொண் டனர்.
முன்னதாக நடந்த கருத்தரங்கில் உதவி ஆய்வாளர்கள் ராய்ஸ்டன், எப்நேசர் ஆகியோர் சாலை பாதுகா ப்பு விழிப்புணர்வைப்பற்றி மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்கள். நிகழ்ச்சி யில் ஆசிரியர்கள் அலைக் சன், தனபால், ஜெனிங்ஸ் காமராஜ் உட்பட பலர் கல ந்து கொண்டனர். என்.சி.சி ஆசிரியர் சுஜித் நன்றி கூறி னார்.நிகழ்ச்சிக்கான ஏற்பா டுகளை 9-வது தமிழ்நாடு சிக்னல் என்.சி.சி சார்பில் ஜே.சி.ஒ.கணேசன் மற்றும் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியின் என்.சி.சி ஆசிரி யர் சுஜித் ஆகியோர் செய்தி ருந்தனர்.