» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

டிஎம்எம் கல்லூரி சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி!

வியாழன் 12, ஜனவரி 2023 3:50:01 PM (IST)



தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் தாலுகா, குளத்தூர் டிஎம்எம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பாக சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.  

கல்லூரியின் இயக்குனர் ப.கோபால் குளத்தூர் பத்திரகாளி, அம்மன் கல்வி அறக்கட்டளை தலைவர்  ல. தாமஸ்  முன்னிலையில் குளத்தூர் காவல் உதவி ஆய்வாளர்  வீரபாண்டியன்  பேரணியைத் துவங்கி வைத்தார்.  குளத்தூர்  காவல் உதவி ஆய்வாளர் இருதயராஜ் மற்றும் குளத்தூர் காவலர்  இராமலிங்கம் சிறப்புடன் நடத்த உதவினர். மேலும் கல்லூரியின் மக்கள் தொடர்பு அதிகாரி கெங்குமணி  கலந்து கொண்டார். 

இந்த விழிப்புணர்வு பேரணி குளத்தூர் காவல் நிலையம் முன்பு ஆரம்பித்து குளத்தூர் பஸ் பேருந்து நிலையம் சென்று முடிவடைந்தது. பேரணியில் சாலைப் பாதுகாப்பு  வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு மாணவ, மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர். பேரணி ஏற்பாடுகளை கல்லூரியின் முதல்வர் தலைமையில் நாட்டு நலப்பணித் திட்டம்  ஒருங்கிணைப்பாளர்  பா.வெர்ஜின் பிரதீபா செய்திருந்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory