» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
துாத்துக்குடியில் தேசிய நுகர்வோர் தின விழா: சார் ஆட்சியர் பங்கேற்பு!
திங்கள் 26, டிசம்பர் 2022 10:40:39 AM (IST)
துாத்துக்குடியில் சார் ஆட்சியர் கௌரவ்குமார் தலைமையில் நுகர்வோர் உரிமைகள் தினவிழா நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட உணவு பொருள் வழங்கல் மற்றும் அரசு நுகர்வோர் பாதுகாப்புத் துறை, எம்பவர் இந்தியா, நுகர்வோர் கல்வி ஆராய்ச்சி நடுவம் மற்றும் வ.உ.சி., கல்வியியல் கல்லுாரி சார்பில் தேசிய நுகர்வோர் உரிமைகள் தின விழா நடைபெற்றது. விழாவிற்கு, துாத்துக்குடி சார் ஆட்சியர் கௌரவ்குமார் தலைமை வகித்தார்.
துாத்துக்குடி மாவட்ட உணவு வழங்கல் அதிகாரி அபுல்காசிம் முன்னிலை வகித்தார். எம்பவர் இந்தியா கவுரவ செயலாளர் சங்கர் வரவேற்றார். விழாவைஒட்டி, விழிப்புணர்வுக்காக கோலப் போட்டி நடந்தது. வ.உ.சி., கல்வியியல் கல்லுாரி முதல்வர் கனகராஜ் வாழ்த்துரை வழங்கினார். துாத்துக்குடி தாலுகா சிவில் சப்ளை தாசில்தார் ஜஸ்டின் செல்லத்துரை நன்றி தெரிவித்தார்.