» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

அகில இந்திய அளவிலான கராத்தே போட்டிக்கு செர்வைட் சிபிஎஸ்இ பள்ளி மாணவர்கள் தேர்வு

வியாழன் 22, டிசம்பர் 2022 11:54:46 AM (IST)



அகில இந்திய அளவிலான கராத்தே போட்டிக்கு செர்வைட் சிபிஎஸ்இ பள்ளி மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் மறவன்மடத்தில் அமைந்துள்ள செர்வைட் சிபிஎஸ்இ பள்ளி மாணவர்கள் ஜனவரி மாதம் 28ஆம் தேதி கோவாவில் நடைபெற உள்ள சோபுக்காய் கோஜுரியு கராத்தே டூ- அகில இந்திய அளவிலான கராத்தே போட்டிக்கு இந்திய தலைமை பயிற்சியாளர் மற்றும் தொழில் நுட்ப இயக்குனர் ரென்ஷி சுரேஷ்குமார் தேர்வு செய்தார். 

அதில் செர்வைட் சிபிஎஸ்இ பள்ளியைச் சேர்ந்த ஹரிஷ் தங்கராஜ், இஷாந்த்குமார், அருள்குமார், ஞான கான்சீயூஸ், ஜெனிஸ் ஆண்டனி ஆகியோர் தேர்வு பெற்றனர். தேர்வு பெற்ற மாணவர்களை செர்வைட் சிபிஎஸ்இ பள்ளி தாளாளர் ஃப்ளாரி மேரி, செர்வைட் சிபிஎஸ்இ பள்ளி தலைமை ஆசிரியை மெர்சி இம்மாகுலேட் மற்றும் சோபுக்காய் கோஜுரியு கராத்தே டூ - தூத்துக்குடி மாவட்ட செயலாளர் சென்சாய் முத்துராஜா, பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பாராட்டினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory