» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
அகில இந்திய அளவிலான கராத்தே போட்டிக்கு செர்வைட் சிபிஎஸ்இ பள்ளி மாணவர்கள் தேர்வு
வியாழன் 22, டிசம்பர் 2022 11:54:46 AM (IST)
அகில இந்திய அளவிலான கராத்தே போட்டிக்கு செர்வைட் சிபிஎஸ்இ பள்ளி மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் மறவன்மடத்தில் அமைந்துள்ள செர்வைட் சிபிஎஸ்இ பள்ளி மாணவர்கள் ஜனவரி மாதம் 28ஆம் தேதி கோவாவில் நடைபெற உள்ள சோபுக்காய் கோஜுரியு கராத்தே டூ- அகில இந்திய அளவிலான கராத்தே போட்டிக்கு இந்திய தலைமை பயிற்சியாளர் மற்றும் தொழில் நுட்ப இயக்குனர் ரென்ஷி சுரேஷ்குமார் தேர்வு செய்தார்.
அதில் செர்வைட் சிபிஎஸ்இ பள்ளியைச் சேர்ந்த ஹரிஷ் தங்கராஜ், இஷாந்த்குமார், அருள்குமார், ஞான கான்சீயூஸ், ஜெனிஸ் ஆண்டனி ஆகியோர் தேர்வு பெற்றனர். தேர்வு பெற்ற மாணவர்களை செர்வைட் சிபிஎஸ்இ பள்ளி தாளாளர் ஃப்ளாரி மேரி, செர்வைட் சிபிஎஸ்இ பள்ளி தலைமை ஆசிரியை மெர்சி இம்மாகுலேட் மற்றும் சோபுக்காய் கோஜுரியு கராத்தே டூ - தூத்துக்குடி மாவட்ட செயலாளர் சென்சாய் முத்துராஜா, பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பாராட்டினர்.