» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
தூத்துக்குடி பாரதியார் வித்யாலயம் பள்ளி மாணவிகளுக்கு இலவச கம்ப்யூட்டர் பயிற்சி
புதன் 14, டிசம்பர் 2022 3:54:40 PM (IST)
தூத்துக்குடி பாரதியார் வித்யாலயம் பள்ளி மாணவிகளுக்கு பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் சார்பில் இலவச கம்ப்யூட்டர் பயிற்சி அளிக்கப்பட்டது.
தூத்துக்குடி ஏ.பி.சி. மகாலட்சுமி கல்லூரியும், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் சுயதொழில் மற்றும் திறன் வளர்ப்பு மையமும் இணைந்து பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவிகளுக்கு போதிய கம்ப்யூட்டர் அறிவை பெறவும், அதன் மென்பொருட்கள் பயன்படுத்தும் திறன்களில் வளர்ச்சி பெறவும் மாணவிகளுக்கு இலவச கம்ப்யூட்டர் பயிற்சி அளித்து வருகிறது. அதன்படி தூத்துக்குடி பாரதியார் வித்யாலயம் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 26 மாணவிகள் 10 நாள் பயிற்சியை பெற்றுள்ளனர்.
பயிற்சி முடித்த மாணவ, மாணவிகளுக்கு பல்கலைக்கழக சான்றிதழ் வழங்கும் விழா ஏ.பி.சி.மகாலட்சுமி கல்லூரி முதல்வர் பாலசண்முக தேவி தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக வ.உ.சி. கல்விக்கழக செயலாளர் ஏ.பி.சி.வீ. சொக்கலிங்கம் கலந்து கொண்டு பள்ளி மாணவிகளுக்கு பல்கலைக்கழக சான்றிதழ்களை வழங்கி மாணவிகளுக்கு கணிப்பொறிக் கல்வியின் அவசியம் பற்றி பேசினார். நிகழ்ச்சியில் பயிற்சி ஒருங்கிணைப்பாளர்கள் ராதா, சிவகாம சண்முகசுந்தரி, ஆசிரியை டெய்சி, ஜானி சோபியா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்.தட்சிணாமூர்த்திDec 15, 2022 - 08:40:42 AM | Posted IP 162.1*****