» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
தமிழ் இலக்கிய திறனறிவு தேர்வில் வேம்பார் அரசு பள்ளி மாணவிகள் சிறப்பிடம்!
புதன் 14, டிசம்பர் 2022 11:00:20 AM (IST)
தமிழ் இலக்கிய திறனறிவு தேர்வில் வேம்பார் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகள் 5பேர் வெற்றி பெற்றுள்ளனர்.
தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை சார்பாக பிளஸ் 1 படிக்கும் மாணவர்களுக்கு தமிழ் இலக்கிய திறனறிவு தேர்வு கடந்த அக்டோபரில் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் 100க்கும் மேற்பட்ட பள்ளிகள் இதில் கலந்து கொண்டன. வேம்பார் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் வர்ஷினி, முத்துமாரி, மரிய ஜென்சியா, பிரியா, பிரான்கா ஆகிய ஐந்து மாணவிகள் தேர்ச்சி பெற்று கோவில்பட்டி கல்வி மாவட்ட அளவில் முதலிடம் பெற்றனர்.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தமிழக அரசின் உதவித் தொகையாக மாதம் 1500 வீதம் ரூ.36ஆயிரம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. வெற்றி பெற்ற மாணவிகளையும், வெற்றிக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்கள் வனஜா மற்றும் மாணிக்கராஜ் ஆகியோரை பள்ளி தலைமை ஆசிரியர் தமிழ்ச்செல்வி, உதவி தலைமை ஆசிரியர் மந்திரமூர்த்தி மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் ஆசிரியர்கள் பொதுமக்கள் பாராட்டினர்