» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
நாசரேத் பெண்கள் பள்ளியில் கிறிஸ்துமஸ் கீத ஆராதனை
சனி 10, டிசம்பர் 2022 3:53:51 PM (IST)
நாசரேத் தூய யோவான் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கிறிஸ்துமஸ் கீத ஆராதனை நடந்தது.
விழாவில் தூய யோவான் பேராலய தலைமைகுரு மர்காஷிஸ் டேவிட் தலைமை வகித்து ஆரம்ப ஜெபம் செய்தார். மாணவிகளின் சிறப்பு பாடல்கள், நடனம், நாடகம் மற்றும் கிறிஸ்துமஸ் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் பள்ளி தாளாளர் சாந்தகுமாரி, தலைமை ஆசிரியை மாசில்லா இதூய யோவான் ஆசிரியர் பயிற்சி நிறுவன தாளாளர் ராஜசேகர், முதல்வர் லீதியாள் கிரேஸ்மணி, மாதிரி பள்ளி தலைமை ஆசிரியை ஷீலா, பேராலய சபை ஊழியர் ஜாண்சன் மற்றும் ஆசிரியைகள், அலுவலர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.